தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செயல்முறை இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்த திட்டத்தின்படி, மார்ச் 30, 2026 அன்று தொடங்கிய வேட்பு மனு தாக்கல் காலம் எட்டு நாட்கள் என்றாலும், அரசு விடுமுறை நாட்களைத் தவிர்த்து நான்கு வேலை நாட்களில் மட்டுமே மனுக்கள் பெறப்பட்டன.
தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்த வேட்பு மனு தாக்கல் கட்டம் தேர்தல் நடவடிக்கைகளின் முக்கிய பகுதியாக அமைந்தது. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான மார்ச் 30 அன்று 573 வேட்பாளர்கள் மனுக்களைத் தாக்கல் செய்தனர். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய வேட்பாளர்களும் அடங்குவர். இரண்டாவது நாளில் 788 பேர் மனு தாக்கல் செய்தனர்.

மூன்றாவது நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனுக்களைச் சமர்ப்பித்ததால், மொத்த எண்ணிக்கை 2,000ஐத் தாண்டியது. இறுதி நாளான இன்று காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பல ஒரே நேரத்தில் மனு தாக்கல் செய்யும் பரபரப்பு நிலவியது. தேர்தல் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதுவரை மொத்தம் 3,430 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் ஆண் வேட்பாளர்களிடமிருந்து 2,731 மனுக்களும், பெண் வேட்பாளர்களிடமிருந்து 698 மனுக்களும் அடங்கும்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் மோடி மேஜிக்! அஜந்தா சிக்னலில் இருந்து அண்ணா சிலை வரை பிரதமர் பிரம்மாண்ட ரோடுஷோ!
பல தொகுதிகளில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட தொகுதிகளில் கரூர் முன்னிலை வகித்ததாகவும், மதுரை தெற்கு உள்ளிட்ட சில தொகுதிகளில் குறைவான மனுக்கள் பெறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தங்கள் மனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர். கடைசி நாளான இன்று ஈபிஎஸ், அய்யனார் நாகேந்திரன், பிரேமலதா, சௌமியா அன்புமணி முப்படை ஏராளமான ஒரு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படலாம், எச்சரிக்கை! மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அதிரடி அறிவுறுத்தல்!