தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஆந்திராவில் பாமூர் நோக்கிச் 40 பயணிகளுடன் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஆந்திராவில் பிரகாசம் மாவட்டம், மார்க்காபுரம் அருகே சென்றபோது எதிர்திசையில் ராயவரம் அருகே உள்ள கல் குவாரியில் இருந்து வந்த ஒரு டிப்பர் லாரி பேருந்து மீது மோதியதில் நொடியில் தீப்பிடித்து எரிந்தது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 10 பயணிகள் சம்பவத்தின் போதே உயிருடன் எரிந்தனர். ட்ரிப்பர் லாரி மோதிய வேகத்தில் பேருந்தின் டீசல் டேங்கர் வெடித்ததில், நொடிகளில் தீ வாகனம் முழுவதும் பரவியதால் தூக்கத்தில் இருந்த பயணிகள் கண்விழிப்பதற்குள் தீப்பிழம்புகளால் சூழப்பட்டனர்.
என்ன நடக்கிறது அறிவதற்கு முன்பே தீ முழுவதும் பரவியது. சிலர் ஜன்னல் கண்ணாடியை உடைத்துத் தப்பித்தாலும், துரதிர்ஷ்டவசமாக பத்து பேர் உள்ளேயே சிக்கி தீயில் உயிரிழந்தனர். தகவல் கிடைத்த உடனேயே, தீயணைப்புப் படையினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: ஆந்திராவில் நிகழ்ந்த சோகம்..! நெஞ்சை பிழிந்த பேருந்து தீவிபத்து... பலி எண்ணிக்கை உயர்வு..!!

படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதனால் பேருந்து தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்து உள்ளது.
இதனிடையே மார்க்கபுரம் மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பேருந்து விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா இரண்டு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆந்திரா வெடிவிபத்து... பாதுகாப்பு குறைபாடுதான்... கொந்தளித்த செல்வப்பெருந்தகை..!