நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தார். நேற்று (பிப்ரவரி 5, 2026) ராஜ்யசபாவில் நிகழ்த்திய பதிலுரையில், ராகுல் காந்தி மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவை "துரோகி" என்று அழைத்ததை கடுமையாக கண்டித்தார்.
ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது, முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரான ரவ்னீத் சிங் பிட்டு அங்கு வந்தார். அப்போது ராகுல் அவரை "துரோகி நண்பா" என்று குறிப்பிட்டு, கை குலுக்க முயன்றார். ஆனால் பிட்டு அதை மறுத்து, ராகுலை "தேசத்தின் எதிரி" என்று பதிலடி கொடுத்தார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி தனது உரையில், "காங்கிரஸின் யுவராஜ் ராகுல் காந்தியின் திமிர் பேச்சு புதிய உச்சத்தை எட்டியுள்ளது" என்று குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியிலிருந்து பலர் வெளியேறியும், வேறு கட்சிகளுக்கு சென்றும் இருந்தனர். ஆனால் அவர்களை ராகுல் துரோகி என்று அழைக்கவில்லை. ரவ்னீத் சிங் பிட்டுவை மட்டும் துரோகி என்று அழைத்தது, அவர் சீக்கியர் என்பதால்தான் என்று மோடி குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: பிரதமருக்கு எதிரான சதித்திட்டம்!! பார்லி.,-யில் பழி தீர்க்க முயற்சி!!! மோடிக்கு வைக்கப்பட்ட குறி!! காங்கிரசை சாடும் நயினார்!

"இது தனி நபரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தையும் அவமானப்படுத்தியுள்ளது. சீக்கியர்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார்" என்று மோடி கடுமையாக சாடினார். பிட்டுவும் அவரது குடும்பமும் தேசத்திற்காக பெரும் தியாகங்கள் செய்துள்ளனர். பாஜகவுக்கு மாறியதற்காக மட்டுமே துரோகி என்று அழைக்கப்பட்டுள்ளது. "துரோகி" என்ற சொல் சாதாரணமானது அல்ல. நாடு இதை ஏற்க முடியாது என்று விளக்கினார்.
ராகுலின் இந்த பேச்சு காரணமாகவே காங்கிரஸ் கட்சி அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று பிரதமர் எச்சரித்தார். காங்கிரஸில் சீக்கியர்கள் மீதான வெறுப்பு மனப்பான்மை இருப்பதை இது வெளிப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் சீக்கிய சமூகத்தினர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசியல் வட்டாரங்களில் இது வரும் தேர்தல்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தரப்பில் இதற்கு பதில் அளிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: இந்த தப்பை மட்டும் பண்ணிறாதீங்க!! மோடி கறார்! டெல்லி என்.டி.ஏ - எம்.பி மீட்டிங்கில் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!