வர உள்ள சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற வேகத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதற்காக கட்சிக்குள் நிலவி வரும் உள்கட்சி பிரச்சனைகள், கட்சிக்கு வெளியே இருந்து ஓபிஎஸ், வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் கொடுக்கு குடைச்சல்களை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக கையாண்டாலும், கூட்டணி விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டதாக பேச்சுகள் கிளம்பி வருகின்றன.

எடப்பாடி பழனிசாமியை ஒரேயடியாக விரட்டி, விரட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்க வைத்துள்ள பாஜக. இதனால் ஏற்கனவே சிறுபான்மையினர் மத்தியில் அதிமுக வாக்கு வங்கி அடிபட ஆரம்பித்ததாக அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து கூறுவருகின்றனர். மேலும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் வைக்கவிருந்த கூட்டணி கைநழுவியதாக கூறப்படுகிறது. இதோடு முடிந்ததா என்றால், இருந்த இரண்டு எம்.பி.சீட்களையும் தனது கட்சிக்கே வைத்துக்கொண்டு தேமுதிக, பாமகவிற்கு கல்தா கொடுத்துவிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இதையும் படிங்க: பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

இதில் தேமுதிகவிற்காவது வாக்கு வங்கி கிடையாது எனச் சொல்லி சமாதானம் ஆன அதிமுகவினர், பாமகவை எடப்பாடி பழனிசாமி இப்படி நட்டாற்றில் விட்டிருக்கக்கூடாது என புலம்பினர். காரணம் இதற்கு முன்னதாக அன்புமணி தான் எம்.பி.யாக இருந்தார். எனவே அவருடைய பதவியை அவருக்கே கொடுப்பது போல் பாமகவிற்கு ஒரு சீட் ஒதுக்கியிருந்தால், சட்டமன்ற தேர்தல் கூட்டணியும் உறுதியாகி இருக்கும், குறைவான சீட்களை கொடுத்து பாமகவை மடக்கியும் இருக்கலாம் என்பதே அதிமுக சீனியர்கள் சொல்லும் கணக்கு.

ஆனால், எடப்பாடி பழனிசாமி எம்.பி.சீட்டை அன்புமணிக்கு கொடுக்காமல் பாமகவை சீண்டிவிட்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதனை தனது கட்சிக்கே பயன்படுத்திக் கொண்டதால் அவர் கடும் அப்செட்டில் இருக்கிறார். இதை சமீபத்தில் நாந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார். திருவள்ளூர்ல நடந்த பாமக்கடைய ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ் தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் மூலமாக கிட்டத்தட்ட 60,000 கோடி ரூபாய் அளவுல ஊழல், முறைக்கேடு எல்லாம் நடந்துட்டு இருப்பதாக திமுக அரசு மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும் தமிழ்நாடு அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருப்பதாக கூறினார். இன்னொரு பக்கம் தனியார் நிறுவனங்களிலும் 75% உள்ளூர் மக்களுக்கு கட்டாயமாக வேலைவாய்ப்பு கொடுக்கணும் அப்படின்னு தீர்மானங்களை இயற்றி இருந்தாரு. அதே நேரத்துல வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல்ல பாமக வைக்கின்ற கூட்டணி ஆட்சி அமையும் என்றும், நாமளும் ஆட்சி புரியணும் என்றும் சொல்லியிருக்காரு.
அதாவது ஆட்சிக்கு உதவி செய்கின்ற கூட்டணி கட்சியும் ஆட்சியில் அங்கம் வைத்தால் மட்டும்தானே அது சமூக நீதி ஆட்சியா இருக்கும், அப்படின்னு சொல்லி இருக்காரு. இதன் மூலமாக விஜய் உடைய தமிழக வெற்றிக் கழகத்திற்கு அன்புமணி சிக்னல் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஏற்கனவே தன்னோடு கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்களிக்கப்படும் என அறிவித்திருந்தார். எனவே வடமாவட்டங்களில் வளர்ந்து வரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம், அங்கு ஏற்கனவே வளமாக வளர்ந்துள்ள பாமகவுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வேலியே பயிரை மேயுது... பாமக உள்ளேயே சூழ்ச்சியாளர்கள்... சூசகமாக சொன்ன அன்புமணி!