×
 

குதிரை பேரம் நடத்தியது யார்? அந்த ஹோட்டலில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை தங்க வைத்தது யார்? ஆதவ் அர்ஜுனா நேரடி கேள்வி!

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியில் முஸ்லிம் லீக் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அங்குள்ள அரசியல் சூழல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.

அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது என்றும், அவர்களை அங்கு தங்க வைத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டசபையில் பேசிய ஆதவ் அர்ஜுனா, ஐயூஎம்எல் எம்எல்ஏக்களிடம் தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாக குறிப்பிட்டார். ஆனால், தவெக மீது திட்டமிட்டு தவறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மறுப்பு தெரிவித்தார்.

இதையும் படிங்க: என்னை பற்றி சட்டசபையில் பேசாதீங்க! மு.க.ஸ்டாலினுக்கு மார்ட்டின் தூது? பின்னணியில் ஆதவ் அர்ஜூனா!

தவெக ஆட்சி அமைக்கும் முயற்சியில் தனிப்பட்ட எம்எல்ஏக்களிடம் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும் ஆதவ் அர்ஜுனா கூறினார். மாறாக, காங்கிரஸ், முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களுடன் அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியில் முஸ்லிம் லீக் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அங்குள்ள அரசியல் சூழல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார். பின்னர் தமிழகத்தில் உள்ள முஸ்லிம் லீக் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறினார்.

இதனிடையே, ஐயூஎம்எல் கட்சியைச் சேர்ந்த இரு எம்எல்ஏக்கள் தங்கியிருந்த ஹோட்டல் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது என ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். அவர்கள் அங்கு யாரால் தங்க வைக்கப்பட்டனர், இதன் பின்னணியில் யார் இருந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், குதிரை பேரத்தில் ஈடுபட்டது திமுகதான் என்ற குற்றச்சாட்டையும் ஆதவ் அர்ஜுனா முன்வைத்தார். இதற்கு திமுக தரப்பில் இருந்து என்ன பதில் வரும் என்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு ஐகோர்ட் கெடு! ஆகஸ்ட் 27க்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share