×
 

“எங்களுக்கு ஜனநாயகன் வேண்டாம்... ஜனநாயகம் வேண்டும்!” முதல்வர் விஜய்யை குறிவைத்து அதிமுக அதிரடி கேள்வி!

நீட் தேர்வு விவகாரம் தற்போது நாடாளுமன்றம் முதல் மாநில அரசியல் களம் வரை முக்கிய விவாதமாக மாறியுள்ளது. ஒருபுறம் மாணவர் அமைப்புகளின் போராட்டங்கள் தொடரும் நிலையில், மறுபுறம் அரசியல் கட்சிகளின் விமர்சனங்களும் அதிகரித்து வருகின்றன.

டெல்லியில் நடைபெற்று வரும் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்திலும் பல்வேறு மாணவர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.

போராட்டங்களில் ஈடுபட்ட சில மாணவர்கள் மற்றும் அமைப்பினரை போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்து வருகின்றனர். இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அமித்ஷாவின் புதுச்சேரி பயணம் திடீர் ரத்து.! நீட் போராட்டம் எதிரொலி? அதிகாரிகள் கூறியது என்ன?

இந்த நிலையில், அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் தமிழக முதலமைச்சர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எங்களுக்கு ஜனநாயகன் வேண்டாம்..
ஜனநாயகம் வேண்டும்!

போராடும் மக்களை அவதூறாக பேசி குண்டுகட்டாக கைது செய்வது தான் ஜனநாயகமா?

வீதியில் இறங்கி மக்கள் போராடும் நிலையில் மக்களோடு நிற்க வேண்டிய ஜனநாயகன் எங்கே போனார்?

பதில் இருக்கிறாதா?@CMOTamilnadu.#பொய்க்கால்_குதிரை_அரசு pic.twitter.com/bi1dAY3N6z

— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) July 23, 2026

அந்த பதிவில், “எங்களுக்கு ஜனநாயகன் வேண்டாம்... ஜனநாயகம் வேண்டும்!” என்று குறிப்பிடப்பட்டு, போராடும் மக்களை அவதூறாக பேசி குண்டுக்கட்டாக கைது செய்வது தான் ஜனநாயகமா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலையில், மக்களுடன் நிற்க வேண்டிய ஜனநாயகன் எங்கே சென்றார் என்றும் அதிமுக ஐடி விங் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளது.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், அவரது ஆட்சி நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக மாணவர் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்கள் தொடர்பான அணுகுமுறை குறித்து அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

நீட் தேர்வு விவகாரம் தற்போது நாடாளுமன்றம் முதல் மாநில அரசியல் களம் வரை முக்கிய விவாதமாக மாறியுள்ளது. ஒருபுறம் மாணவர் அமைப்புகளின் போராட்டங்கள் தொடரும் நிலையில், மறுபுறம் அரசியல் கட்சிகளின் விமர்சனங்களும் அதிகரித்து வருகின்றன.

அதிமுகவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இதற்கு என்ன பதில் அளிக்கும் என்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: அடுத்தடுத்து கண்ணீர் சிந்திய தவெக அமைச்சர்கள்... ‘ஜனநாயகன்’ வெளியீட்டில் நெகிழ வைத்த உணர்ச்சி தருணங்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share