×
 

மருத்துவமனையில் இருக்கும் பாமக எம்.எல்.ஏக்கள்... பெயர் குறிப்பிடாமல் அன்புமணி சொன்ன சொல்!!

பாமக எம்எல்ஏக்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் - பாமக தலைவருமான அன்புமணி ஆகியோர் இடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கட்சிப் பொதுக் கூட்டத்தில் மோதல் தொடங்கியது. அந்த மோதல் தற்போது வரை தொடர்கிறது. அன்புமணி மீதும், அவரின் மனைவி சவுமியா மீதும் சரமாரியான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன் வைத்து வருகிறார். தனது மூச்சு அடங்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவியை அளிக்க மாட்டேன் என்று ராமதாஸ் அண்மையில் தெரிவித்தார். பாமக தலைவரான அன்புமணி பின்னால், 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ராமதாஸ் இதுவரை 73 மாவட்ட செயலாளர்கள், 57 மாவட்ட தலைவர்களை நீக்கியுள்ளார். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் என்ற முறையில் நிர்வாகிகளை நியமிப்பதற்கு தனக்கு அதிகாரம் உள்ளது என்று ராமதாஸ் கூறி வருகிறார். ஆனால், ராமதாஸ் நீக்கிய நிர்வாகிகளை அன்புமணி மீண்டும் நியமித்து வருகிறார். ராமதாஸ் வழக்கம்போல தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தநிலையில், அன்புமணி 10 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்... ஆவேசமாக பேசிய அன்புமணி!!

மாவட்ட வாரியாக, பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, அன்புமணி பேசி வருகிறார். இதனிடையே பாமக எம்.எல்.ஏ அருள் நேற்று சென்னை தலைமை செயலகம் சென்றபோது நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜி.கே.மணி எம்எல்ஏவுக்கும் நேற்று திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று பாமகவின் பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடைபெறும் சூழலில், சேலம், தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த பாமக எம்எல்ஏக்கள் இருவர், அடுத்தடுத்து நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பாமகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுக்குறித்து சேலம் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நமது கட்சியின் 2 எம்எல்ஏக்களுக்காக பிரார்த்தனை செய்வோம். சிகிச்சை பெறும் அவர்கள் இருவரும் விரைவில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பூரணமாக குணமடைய வேண்டும் என்று இருவரின் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share