BreakingNews! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை?! ஜூன் 15ல் தனிக்கட்சி!? பெருந்துறை இடைத்தேர்தலில் போட்டி? கசிந்தது மூவ்?
பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியிலிந்து விலகினார். டில்லியில் கட்சி தலைவர் நிதின் நபினிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் கட்சியின் தேசிய தலைமைக்கு தனது ராஜினாமா கடிதத்தை அளித்ததாக கூறப்படும் நிலையில், தமிழக அரசியல் வட்டாரங்களில் இதுகுறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது.
தனது ராஜினாமா கடிதத்தில், கட்சியில் இருந்து தன்னை ஓரங்கட்டப்பட்டதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த அவர், குறுகிய காலத்திலேயே தமிழக அரசியலில் முக்கிய முகமாக உருவெடுத்தார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை, தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த காலத்தில் கட்சியின் வாக்கு சதவீதத்தை உயர்த்தியதோடு, பல்வேறு பிரசார நடவடிக்கைகள் மூலம் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தியதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக “என் மண், என் மக்கள்” நடைபயணம் மூலம் மாநிலம் முழுவதும் கவனம் பெற்ற அவர், ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கு எதிராக தீவிர விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இதன் மூலம் அவருக்கென தனித்த அரசியல் ஆதரவு வட்டமும் உருவானது.
இதையும் படிங்க: திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா தவெக? இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!
மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, கட்சியில் அவருக்கு புதிய பொறுப்பு வழங்கப்படவில்லை என்றும், அவரது ஆதரவாளர்களுக்கும் வாய்ப்புகள் குறைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியே தனிக்கட்சி தொடங்கும் முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவுடன் அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளார் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. சமீபத்தில் இருவரும் சந்தித்து பேசியதாக கூறப்படுவதால் இந்த தகவலுக்கு மேலும் முக்கியத்துவம் கிடைத்துள்ளது. எனினும், இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
வரும் நாட்களில் தனது ஆதரவாளர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படும் அண்ணாமலை, புதிய அரசியல் முடிவுகள் குறித்து அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கட்சி தொடங்கப்பட்டால், வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழக அரசியலில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: பாஜக தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார் அண்ணாமலை! கட்சியில் பெரிய பதவியா? தனிக்கட்சி துவக்கமா?