“நல்லா வருது.. வேணான்னு பாக்குறேன்”..! நாங்க கோட் சூட் போட கூடாதா..? திருச்சியை அலறவிட்ட முதல்வர் விஜய்..!
திருச்சியில் முதல்வர் விஜய் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, தன்னை எம்ஜிஆர் ரோடு ஒப்பிட்டுப் பேசவில்லை என்றும் எம்ஜிஆர் தான் எனவும் தெரிவித்தார். இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆதரித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் ஆனால் வருங்காலத்தில் உங்களுடைய முழு ஆதரவை பெறுவேன் என்ற நம்பிக்கை தன் மனதில் ஆழமாக பதிந்திருப்பதாக கூறியுள்ளார். நீங்கள் அமைத்துக் கொடுத்திருக்கும் இந்த ஆட்சியில் எல்லா நன்மைகளையும் கண்கூடாக பார்த்த தான் போகிறீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது என்றார்.
யார் எந்த நிலைக்கு போனாலும், கிண்டலும் கேலியும் இருக்கத்தான் செய்யும் எனவும் நம்மை பற்றி நமது அரசியலைப் பற்றி கிண்டலும் கேலியுமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தயவுசெய்து அதனை நிறுத்திக் கொள்ளாதீர்கள் நீங்கள் பேசிக் கொண்டே இருங்கள் நான் மக்களுக்கு தேவையானது செய்து கொண்டே இருப்பின் எனவும் தெரிவித்தார். என்னிடம் இருப்பது இரு வண்ணம் என்றும் கருப்பு வெள்ளை கோட் சூட் போடுவதற்கான காரணத்தையும் எடுத்துரைத்தார்.
இங்கு இரண்டே பேருக்கு நடுவில்தான் போட்டி என்றும் ஒன்று டிவிக்கு மற்றொன்று டிஎம்கே என்று தெரிவித்தார். ஏன் நாங்கள் கோட்சூட் போடக்கூடாதா என்றும் அதிகாரம் செலுத்துபவர்கள் தான் கோட்ஸ் போட வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். ரீல்ஸ் போட்ட கூட்டம் எல்லாம் சட்டமன்ற நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இன்னமும் நமது மக்களை தற்குறி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் அவர்கள் தான் உங்கள் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாகி இருக்கிறார்கள் என தெரிவித்தார். இன்னமும் அதனை செய்வார்கள் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கல்யாண வீட்டுல கூட கதறல் தான்..! 100 யூனிட் ஜெ. மேடம் குடுத்தது... திமுகவை பந்தாடிய முதல்வர் விஜய்..!
உண்மையை சொன்னால் அந்த கூட்டத்திற்கு கசக்கும் எனவும் மக்கள் மனதை நீங்கள் இப்படி புரிந்து வைத்திருந்தீர்கள் என்றால் தவறாக பேசியிருக்க மாட்டீர்கள் என்றும் தெரிவித்தார். கவர்ச்சியில் மக்கள் மயங்கி ஓட்டு போட்டு விட்டார்கள் என்று கூறுகிறார்கள் என்றும் நக்கல் அடித்தார். “நல்லா வருது வேணான்னு பாக்குறேன்”... என்று கூறினார்..! உண்மையை சொல்லு உடன்பிறப்பே வா என்ற திமுக கூறுகிறார்கள் என்றும்… அந்தக் காரணத்தை உங்கள் குடும்பத்திலேயே கேளுங்கள் என்று மக்கள் கூறுவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சி இல்லாத சட்டமன்றம்..! இந்த நிமிஷத்துக்காகவே காத்திருந்தேன்..! அமைச்சர் ரமேஷ் நெகிழ்ச்சி..!!