”எம்ஜிஆரின் அதிமுக” இன்று ”அமித்ஷாவின் அதிமுக”வாக மாறிவிட்டது... இபிஎஸை அலர்ட் செய்த காங்கிரஸ் எம்.பி...!
அதிமுகவின் அனைத்து முடிவுகளையும் நாக்பூர் எடுக்கின்ற காலம் வெகுதொலைவில் இல்லை என எம்.பி.மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
அ. தி.மு.க.வை, ஆர்.எஸ்.எஸ்.வழிநடத்துவதில் எந்த தவறும் இல்லை என எல். முருகன் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அதிமுகவின் அனைத்து முடிவுகளையும் நாக்பூர் எடுக்கின்ற காலம் வெகுதொலைவில் இல்லை என கூறினார்.
விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 1,01,800 மதிப்புள்ள 3சக்கர வாகனங்கள் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 8,14,400 மதிப்பில் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “ த.வெ.க இரண்டாவது மாநில மாநாட்டில் விஜய் பேசியிருந்தது குறித்த கேள்விக்கு? அது பழைய கதை ஆகிவிட்டது. காங்கிரஸ் குறித்து அவர் விமர்சனம் எந்த விமர்சனமும் செய்யவில்லையே என்ற கேள்விக்கு அது குறித்து விஜய்யிடம் கேளுங்கள் என்றார்.
ராகுல் காந்தியின் பீகார் யாத்திரையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டது மிக முக்கியமானது. அவர் சொன்னதை போல் சொந்த மக்களின் வாக்குகளை திருடி தேர்தலில் வெற்றி பெறுவது என்பது பயங்கரவாதத்திற்கு ஈடானது. இந்த செயல் குறிப்பிட்ட விதத்திலே ஆர் எஸ் எஸ் இன் துணையினோடு குஜராத் மாடலாக மாறியிருக்கிறது. பாஜகவின் அவர்களுக்கு மட்டும் ஐந்து வாக்குகளும் மற்றவர்களுக்கு உருவாக்கும் அளிக்கக்கூடிய குஜராத் மாடலாக இருக்கிறது இதனையே இந்தியா முழுவதும் பரப்பப்பட்டிருக்கிறது. இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 65 லட்சம் வாக்காளர்களை நீக்கிவிட்டு பீகாரில் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த சதியை ராகுல் காந்தி முறியடித்திருக்கிறார். இந்த யாத்திரையில் பங்கேற்ற முதல்வருக்கு நன்றி.
இதையும் படிங்க: அதிமுகவின் அடிமடியில் கைவைத்த அமித் ஷா... ஆடிப்போன எடப்பாடி பழனிசாமி...!
பாஜகவை வெற்றி பெற செய்யும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக ராஜீவ் குமார், ஞானேஷ்வர் குப்தா ஆகியோரின் கைகளில் இருந்து தேர்தல் ஆணையத்தை விடுதலை செய்ய வேண்டும். இந்த வாக்குத்திருட்டில் இருந்து இந்தியாவினுடைய ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் இதற்காக எங்களது போராட்டமும் பயணமும் தொடர்கிறது.
அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழிநடத்துவது தவறில்லை என மத்திய அமைச்சர் எல். முருகன் கூறியிருந்தது குறித்த கேள்விக்கு, ஆர்எஸ்எஸ்-ன் கட்டுப்பாட்டில் அதிமுக இருப்பது என்பதை எல்.முருகனின் கருத்து உறுதி செய்திருக்கிறது. அதிமுக ஆர்எஸ்எஸினுடைய ஒரு அங்கமாக மாறிவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது. எம்ஜிஆர் துவங்கிய அதிமுக அமித்ஷாவின் அதிமுகவாக மாறிவிட்டது. ஆர்எஸ்எஸ்யின் துணை அமைப்பாக இபிஎஸ் மாற்றிவிட்டார். அதிமுகவினர் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. இரட்டை இலை சின்னம் மட்டும்தான் கையில் இருக்கிறது. மொத்த கட்சியும் ஆர்எஸ்எஸ்ன் கைக்குள் சென்று விட்டது. அதிமுகவின் அனைத்து முடிவுகளையும் நாக்பூர் எடுக்கின்ற காலம் தொலைவில் இல்லை.
பீகாருக்கு சென்று வந்த பிறகாவது ஜாதிவாரி கணக்கெடுப்பை ஸ்டாலின் எடுக்க வேண்டும் என அன்புமணி கூறியது குறித்த கேள்விக்கு? இதை மோடியிடம் சொல்லும் தைரியம் அவருக்கு இருக்கிறதா. ஜாதி வாரி கணக்கெடுப்பை இந்தியா முழுவதும் எடுக்க வேண்டுமென ராகுல் காந்தி கூறியபோது அன்புமணி இந்த கருத்தை மோடியிடம் ஏன் வலியுறுத்தவில்லை. மருத்துவக் கல்லூரி அனுமதி செய்வதில் முறைகேடு செய்ததில் அவர் மீதுள்ள சிபிஐ வழக்குக்கு பயந்து தான் மோடியிடம் வலியுறுத்தாமல் இருந்தாரா.? வாக்குத்திருட்டுக்கு எதிராக எந்த ஒரு கருத்தும் அன்புமணி கூறவில்லை. பீகாரில் நிதிஷ் குமார் எடுத்த சாதி வாரி கணக்கெடுப்பு எதற்கும் உதவாதது. இது ஒரு ஏமாற்று வேலை. இதை நீதிமன்ம் நிராகரித்துள்ளது. சமூகநீதியை அன்புமணி அவரது தந்தை ராமதாசிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: ஆயிரம் பேர்ல 600 பேர் திமுக தான்... இபிஎஸ்-க்கு அமைச்சர் முத்துசாமி தக்க பதிலடி..!