×
 

பெரம்பூரில் மண்ணை கவ்வும் விஜய்? சீமான் நிலை என்ன? கலங்கடிக்கும் கருத்து கணிப்பு..!!

2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. அதேபோல திமுகவை வீழ்த்தி ஆட்சி அரியணையில் ஏறவேண்டும் என அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் களமாடி வருகின்றன.

ஒருபக்கம் நாம் தமிழர் கட்சி, மறுபக்கம் தமிழக வெற்றிக் கழகம், ராமதாஸ் மற்றும் சசிகலா என தமிழக அரசியல் களம் பரபரப்பான எட்டி உள்ளது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியின் அடுத்த பகுதியாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதி விளங்கி வருகிறது. விஜய் போட்டியிட இருப்பதாக கூறப்படும் தொகுதி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. ANS என்ற நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 180 இடங்களுக்கும் மேல் வெற்றி வாய்ப்பு பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மண்டலத்தில் 42 தொகுதிகளிலும் மேற்கு மண்டலத்தில் 32 தொகுதிகளிலும் திமுக முந்துவதாக தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் 60% அதிகமான பெண்களின் வாக்கு திமுகவிற்கு செல்லும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விவசாயி படுகொலை... மகள் தற்கொலை..! வாயை திறங்க திருமா..!! விளாசிய EPS..!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆகியோர் தோற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்றும் இரண்டாவது இடத்தை வேண்டுமானால் பெரும் நிலை ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: புதுச்சேரி தொகுதிப் பங்கீடு அதிமுகவுக்கு எச்சரிக்கை மணியா? ... விழித்துக் கொள்வாரா எடப்பாடி பழனிசாமி...?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share