×
 

#BREAKING ஆக்கிரமிப்புகளுக்கு சீல் வைக்க எதிர்ப்பு... ஜோதிமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது பாய்ந்தது வழக்கு...!

கரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் இட பிரச்சனை தொடர்பாக நடந்த போராட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்ட காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக் கிணங்க வெண்ணமலை பாலசுப்பிரமணியசுவாமி ஆலயத்திற்குட்பட்ட கோவில் இடங்களை சீல் வைக்கும் பணியில் இந்து அறநிலை துறை அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவு கிணங்க பல்வேறு இடங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடைகளுக்கு சீல் வைக்கும் பணியும், காலியிடங்களுக்கு போர்டு வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இவனை எதிர்த்து அப்பகுதி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

இதையும் படிங்க: “தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி” - பகீர் குற்றச்சாட்டை முன்வைத்த கரூர் எம்.பி. ஜோதிமணி...!

நேற்று காலை வெண்ணமலை அருகே இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் இடம் எனக் கூறப்படும் பகுதிக்கு நடவடிக்கை மேற்கொள்ளவிருந்தனர்.

அப்பொழுது அங்கு இருந்த 100- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். அப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், ஒரு பெண்கள் உட்பட மூவர் தாங்கள் வைத்திருந்த மண்ணைனையை தலையில் ஊற்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதை தொடர்ந்து பணியில் இருந்த போலீசார் அவர்களை அழைத்துச் சென்று அவர்கள் மீது தண்ணீரில் ஊற்றி பத்திரமாக மீட்டனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் எம்பி ஜோதிமணி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தொடர்ந்து மக்களோடு இணைந்து 20 நிமிடத்திற்கும் மேலாக மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பொதுமக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைவரும் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அருகில் இருந்த தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இதனிடையே நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வந்த அறநிலையத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது போன்ற குற்றங்களுக்காக கரூர் எம்.பி ஜோதிமணி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரூரில் பரபரப்பு... ஒன்று கூடிய மக்கள்... ஜோதிமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் குண்டுக்கட்டாக கைது ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share