×
 

வெளியே தலைகாட்டி 2 வருசமாச்சு!! தெலுங்கானா மாஜி முதல்வர் சந்திரசேகர ராவுக்கு என்னாச்சு?

சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் தோல்விகளால் அதிருப்தி அடைந்த சந்திரசேகர ராவ், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார்.

தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி (பி.ஆர்.எஸ்.) தலைவருமான கே. சந்திரசேகர ராவ் (கே.சி.ஆர்.), 72, ஆட்சியை இழந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் பொது நிகழ்ச்சிகளிலும், சட்டசபை கூட்டத்தொடர்களிலும் பங்கேற்காமல் தவிர்த்து வருவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

2014-ல் ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக உருவானபோது, அதற்கான போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய தலைவர்களில் ஒருவர் சந்திரசேகர ராவ். 2014 மற்றும் 2018 சட்டசபைத் தேர்தல்களில் அவரது கட்சி வெற்றி பெற்று தொடர்ந்து ஆட்சி அமைத்தது. 

ஆனால் 2023 டிசம்பரில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸிடம் படுதோல்வி அடைந்தார். அதன்பிறகு காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றார். 2024 லோக்சபா தேர்தலிலும் பி.ஆர்.எஸ். கட்சி தோல்வியைத் தழுவியது.

இதையும் படிங்க: டேட்டிங் ஆப்பில் பழகிய பெண்ணுக்கு வேட்டு வைத்த நபர்!! கூட்டாளிகளுடன் சேர்ந்து சதி! டெல்லியில் அரங்கேறிய சம்பவம்!

தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிருப்தியில் உள்ள சந்திரசேகர ராவ், பொது நிகழ்ச்சிகளுக்கு வருவதை முழுமையாக தவிர்த்து வருகிறார். இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி, ஹைதராபாதில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எர்ரவல்லி பண்ணை வீட்டில் அவர் ஓய்வு எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் 2023 டிசம்பர் 1 முதல் இதுவரை ஒரு முறை கூட சட்டசபைக்கு வராத சந்திரசேகர ராவ், 1 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் மற்றும் படிகளாக பெற்றுள்ளதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டசபையில் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 

சட்டசபை விதிப்படி, ஒரு எம்.எல்.ஏ. தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேல் சபைக்கு வராமல் இருக்க முடியாது. இந்த விதியைத் தவிர்க்க, சந்திரசேகர ராவ் இதுவரை இரு முறை மட்டுமே சபைக்கு வந்து கையெழுத்திட்டு உடனே சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது பி.ஆர்.எஸ். கட்சியின் பொறுப்பு முழுவதும் அவரது மகன் கே.டி. ராமா ராவ் (கே.டி.ஆர்.) வசம் சென்றுள்ளது. கட்சியின் அனைத்து முடிவுகளையும் அவரே எடுத்து வருகிறார். இளம் தலைவரான கே.டி.ஆர். சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஆனால் சந்திரசேகர ராவின் மருமகன் டி. ஹரீஷ் ராவ், கே.டி.ஆருக்கு போட்டியாளராக உருவெடுத்து வருவதும், மகள் கவிதா தொடர்பான குற்றச்சாட்டுகளும் கட்சியின் பிம்பத்தை பாதித்துள்ளன.

ஆட்சியை இழந்த பிறகு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பொது வெளியில் தலைகாட்டாத சந்திரசேகர ராவின் முடிவு, கட்சி தொண்டர்களிடையே உற்சாகக் குறைவை ஏற்படுத்தியுள்ளது. தோல்விக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட அவர் தயங்குவதாகவும், ‘ஓட்டுக்கு நோட்டு’ வழக்கில் சிறை சென்ற ரேவந்த் ரெட்டியை முதல்வராக எதிர்கொள்ள விரும்பவில்லை என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: #BREAKING: சும்மா அதிருது- ல..! பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய்..! உற்சாக வரவேற்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share