×
 

தீபம் சர்ச்சை!! திருப்பரங்குன்றம் வருகிறார் பிரதமர் மோடி! பாஜக மூத்த தலைவர் உடைத்த சஸ்பென்ஸ்!

மார்ச் 1ல் மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு வரும் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார் என பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1ஆம் தேதி மதுரையில் நடக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அவர் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது பக்தர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதால், பக்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நீடித்து வருகிறது. நீதிமன்ற உத்தரவு இருந்தும் அரசு அனுமதி வழங்காததால், பழநி ஆண்டவர் கோயில் முன்பு பொதுமக்கள் 'தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும்' என்ற வாசகங்களுடன் கலர் கோலம் போட்டு, முருகப்பெருமான் படம் வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட விளக்குகள் ஏற்றினர். பின்னர் கோயில் முன் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடினர்.

பழநி ஆண்டவர் கோயில் தெரு, கோட்டை தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளில் விளக்கேற்றி சஷ்டி கவசம் பாடிய பக்தர்களுடன், பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், மண்டல் தலைவர் வேல்முருகன், மாவட்ட பொதுச்செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 16 கால் மண்டபம் முன்பு ஹிந்து முன்னணி சார்பில் மாநில செயலாளர் கேசவன், பொதுச் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் விளக்கேற்றி கவசம் பாடினர்.

இதையும் படிங்க: ஐயோ! திருப்பரங்குன்றம் தொகுதி வேணாம்! திமுக கூட்டணியில் குழப்பம்! மார்க்., கம்யூ கல்தா!!

ராம சீனிவாசன் பேசியதாவது: "இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தை தீபத் தூணில் ஏற்ற முயற்சி செய்தும், நீதிமன்ற உத்தரவு இருந்தும் அரசு அனுமதிக்கவில்லை. நம்ம மலை, நம்ம முருகன், நம்ம கோயில், நம்ம தீபம் – ஆனால் ஏற்ற முடியவில்லை. முருகப்பெருமான் எதிரிகளை அழிப்பவர். தீபம் ஏற்றவிடாமல் தடுப்பவர்களுக்கு நல்ல புத்தி கொடுப்பார்.

போதைப் பொருள் கடத்துபவர்களை போலீசார் விட்டுவிடுகின்றனர், ஆனால் தீபம் ஏற்றுபவர்களை கைது செய்கின்றனர். அனைத்தையும் முருகன் பார்த்துக் கொண்டிருக்கிறார். தீபம் ஏற்றுவதற்காக பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் – அவர்களுக்கு பாராட்டு. மார்ச் 1ல் மதுரை பொதுக்கூட்டத்திற்கு வரும் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்ய வருகிறார்."

இந்த நிகழ்வு திருப்பரங்குன்றம் தீபத் தூண் சர்ச்சையை மீண்டும் வெப்பமாக்கியுள்ளது. பிரதமரின் வருகை தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் முருகனிடம் தீபம் ஏற்ற அனுமதி கிடைக்க பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுரையில் மோடி!! திருப்பரங்குன்றத்தில் வழிபாடு! பாஜகவின் அடுத்தக்கட்ட ப்ளான்!! உறைந்து போன திமுக!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share