×
 

நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைக்கு நேர் எதிராக உள்ள பா.ஜ.,வினர் கூட, அஞ்சலி செலுத்தினர். அதன்படி, பழனிசாமியும் செல்வார் என எதிர்பார்த்தோம்; ஆனால் செல்லவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மூத்த தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான இரா.நல்லகண்ணு (101) கடந்த 25-ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை என்பது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. சென்னையில் இருந்தபோதும் அவர் வரவில்லை. இதனால் அ.தி.மு.க. நிர்வாகிகளே ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

"நல்லகண்ணு மறைவுக்கு அரசியல், சினிமா, பொது தரப்புகளில் இருந்து பலர் நேரில் வந்தனர். பாஜக போன்ற எதிர் கொள்கை கொண்டவர்கள் கூட அஞ்சலி செலுத்தினர். பழனிசாமியும் வருவார் என எதிர்பார்த்தோம்" என்று கட்சியினர் வருத்தம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

அதிமுக வட்டாரங்கள் கூறுகையில், "2020-ல் எனது தாயார் மறைவுக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் யாரும் வரவில்லை. இப்போது நான் ஏன் போக வேண்டும்?" என்று பழனிசாமி கூறியதாக தெரிவித்தனர். இதனால் கட்சி நிர்வாகிகளும் நேரில் செல்லவில்லை. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மட்டும் அஞ்சலி செலுத்தினார்.

நல்லகண்ணுவுக்கும் அதிமுகவுக்கும் எந்த பகையும் இல்லை. அவர் தேர்தலில் நின்றபோது திமுகதான் எதிர்த்து தோற்கடித்தது. கொரோனா காலத்தில் தாயார் இறப்புக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் வராதது தனிப்பட்ட வருத்தம் என்றாலும், மூத்த தலைவர் மறைவுக்கு அரசியல் நாகரிகம் கருதி நேரில் சென்றிருக்க வேண்டும் என அதிமுக தரப்பிலேயே சிலர் வேதனை தெரிவித்தனர்.

பழனிசாமியின் பிஆர்ஓ உமாபதி கூறுகையில், "நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டு உரிய மரியாதை செலுத்தியுள்ளோம். அன்று பிரசார கூட்டத்துக்கு செல்ல வேண்டியிருந்ததால் நேரில் செல்ல முடியவில்லை" என்றார்.

பழனிசாமி இரங்கல் செய்தியில் "தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர்" என்று புகழ்ந்தார். ஆனால் நேரில் செல்லாதது அரசியல் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தேர்தல் காலத்தில் கட்சிகளுக்கு இடையேயான உறவுகளை பிரதிபலிப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share