×
 

நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும்! நகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அட்வைஸ்!

'மாநகராட்சிகள், நகராட்சிகளில் நகரமைப்பு திட்ட அதிகாரிகள் உட்பட அனைவரும் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும்' என, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) ஆட்சியில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறையை நேரடியாக தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் விஜய், அதிகாரிகளுக்கு மிக முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். 

நகராட்சி நிர்வாகத் துறைக்கு தனி அமைச்சர் நியமிக்காமல், தானே பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய், துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளிடம் பேசியபோது, “நீங்கள் அனைவரும் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்படலாம். உங்களுக்கு த.வெ.க. தரப்பில் எந்தவித அரசியல் தலையீடும் இருக்காது. யாராவது தலையிட்டால், துறை செயலர் மூலம் நேரடியாக எனக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று தெளிவாக உத்தரவிட்டார்.

மேலும், “அமைச்சர் அல்லது ஆளும் கட்சியினருக்காக விதிகளை மீறி வளைந்து கொடுக்க வேண்டாம். அப்படி செய்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என முதல்வர் எச்சரித்துள்ளார். தி.மு.க. ஆட்சியில் இருந்த பெரும்பாலான மாநகராட்சி கமிஷனர்கள், நகராட்சி கமிஷனர்கள், நகரமைப்புத் திட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வரின் இந்த உத்தரவு புதிய அதிகாரிகளுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

இதையும் படிங்க: வளர்ச்சியடைந்த இந்தியா எனும் கனவை நனவாக்குவோம்! நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி சூளுரை!

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: “நகராட்சி நிர்வாகத்தில் பணியாற்றும் அதிகாரிகளில் யார் யார் கமிஷன் பெறும் பழக்கம் உள்ளவர்கள் என்பதை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் பணியிட மாறுதல்கள் விரைவில் மேற்கொள்ளப்படும்” என்றனர்.

த.வெ.க. ஆட்சியின் தொடக்கத்திலேயே ஊழல் மற்றும் அரசியல் தலையீட்டை ஒழிக்கும் வகையில் முதல்வர் விஜய் எடுத்து வரும் நடவடிக்கைகள் அதிகாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நேர்மையான நிர்வாகம் நிலவ வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் மக்களுக்கான அடிப்படை வசதிகள், அனுமதிகள் மற்றும் திட்டங்கள் சீராகவும், ஊழலின்றியும் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் விஜய்யின் இந்த உத்தரவு தமிழகத்தின் நகர்ப்புற நிர்வாகத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் எனக் கருதப்படுகிறது. 

இதையும் படிங்க: தவெக தாவியவர்கள் பதவி இல்லாமல் தவிப்பு! விஜய் கொடுத்த ப்ராமிஸ்! இடைத்தேர்தலுக்கு பிறகு இருக்கு சம்பவம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share