ரொம்ப தாங்க்ஸ்! ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க உதவி! ஆர்மீனியப் பிரதமருக்கு போனில் நன்றி சொன்ன மோடி!
மேற்கு ஆசியாவில் சமீபத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க உதவியதற்காக ஆர்மீனியப் பிரதமருக்கு நன்றி தெரிவித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் சமீபத்தில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க ஆர்மீனியா அளித்த உதவிக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஆர்மீனியப் பிரதமர் நிக்கோல் பாஷினியனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். அண்மையில் நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக அவருக்கும் அவரது கட்சிக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், “மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட சமீபத்திய மோதல்களைத் தொடர்ந்து ஈரானில் சிக்கியிருந்த இந்தியக் குடிமக்களை பாதுகாப்பாக மீட்க உதவியதற்காக நிக்கோல் பாஷினியனுக்கு நன்றி தெரிவித்தேன்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து நிலநடுக்கம்! ஆடிப்போன வெனிசுலா! சுனாமி வார்னிங்! ஆதரவுக் கரம் நீட்ட இந்தியா தயார்! மோடி அறிவிப்பு!
இரு தலைவர்களும் வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசித்தனர். இந்தியா - ஆர்மீனியா உறவுகளை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கு தாம் ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான விவகாரங்களில் ஆர்மீனியா உடனடியாக உதவி கரம் நீட்டியது இந்திய அரசுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. மேற்கு ஆசியப் பகுதியில் ஏற்பட்ட அண்மை நிகழ்வுகள் காரணமாக பல இந்தியர்கள் ஈரானில் சிக்கியிருந்த நிலையில், அவர்களை வெற்றிகரமாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர ஆர்மீனியா முக்கியப் பங்கு வகித்தது.
இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகள் சுமூகமாக இருந்து வரும் நிலையில், பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்புத் துறை, தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவற்றில் புதிய உத்வேகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் இந்த தொலைபேசி உரையாடல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இந்திய மக்களின் பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வரும் பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை பாராட்டுக்கு உரியது என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: வடகிழக்கு இந்தியா முன்னேற்றத்திற்கான நுழைவு வாயில்! பிரதமர் மோடி பெருமிதம்! ரூ.47,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்!