மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு! இனி செய்ய வேண்டியது இதுதான்!
இளைஞர்களுடன் நேரடியாக கலந்துரையாடும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒரு மத்திய அமைச்சர் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு செல்லும் திட்டத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம், எக்ஸ், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்பான மதிப்பீட்டில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளைஞர்களை சமூக வலைதளங்கள் மூலம் அதிகளவில் சென்றடையும் வகையில் அமைச்சர்கள் தங்களது டிஜிட்டல் செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்களின் சமூக ஊடக செயல்பாடுகள் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மே 1 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான காலகட்டத்தில் ஒவ்வொரு அமைச்சரும் சமூக வலைதளங்களில் மேற்கொண்ட செயல்பாடுகள், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்த விதம் மற்றும் அதன் தாக்கம் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய மதிப்பீட்டு அறிக்கை அமைச்சர்களிடம் வழங்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது.
இளைஞர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம், எக்ஸ், பேஸ்புக் போன்ற தளங்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை புதிய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதற்கு சமூக ஊடகங்களை தீவிரமாக பயன்படுத்த வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: “திமாகி நக்சல்கள்” யார்? நாடே பரபரப்பான மோடியின் அந்த ஒரு வார்த்தை! கிரண் ரிஜிஜூ அதிரடி விளக்கம்!
இந்த மதிப்பீட்டில் பிரதமர் மோடி முதலிடத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையிலான செல்பி வீடியோக்கள் உள்ளிட்ட நவீன டிஜிட்டல் உத்திகளை அவர் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். Gen Z மற்றும் Gen Alpha தலைமுறையினருடன் அமைச்சர்கள் நேரடியாகவும் டிஜிட்டல் தளங்கள் வழியாகவும் தொடர்பை அதிகரிக்க வேண்டும் எனவும் பிரதமர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இளைஞர்களுடன் நேரடியாக கலந்துரையாடும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒரு மத்திய அமைச்சர் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு செல்லும் திட்டத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நாள் முழுவதும் நடைபெறும் இந்த பயணங்களில் அரசின் திட்டங்கள், பல்வேறு துறைகளின் சாதனைகள் குறித்து மாணவர்களிடம் அமைச்சர்கள் எடுத்துரைப்பதுடன், நாட்டின் முக்கிய பிரச்னைகள் தொடர்பான இளைஞர்களின் கருத்துகளையும் கேட்டறிய உள்ளனர்.
இந்த பல்கலைக்கழக பயணங்களை மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் ஒருங்கிணைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: “திமாகி நக்சல்கள்” என்றால் என்ன? பிரதமர் மோடி பேச்சால் சூடுபிடித்த விவாதம்! இணையத்தில் பரபரப்பு!