×
 

தூது விட்டது எல்லாம் வீணா?! கண்டுகொள்ளாத கட்சிகள்! ஒத்தையில் நிற்கும் ராமதாஸ்!

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நிலவும் மாறுபட்ட அரசியல் கருத்துகள், அக்கட்சிக்குள் பெரும் புயலை வீச வைத்தபடி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், வட தமிழகத்தின் முக்கிய சக்தியான பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) பெரும் அரசியல் குழப்பத்தில் சிக்கியுள்ளது. கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே உள்ள கருத்து வேறுபாடு கட்சியை இரு பிரிவுகளாக பிரித்துள்ளது. கூட்டணி முடிவு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அரசியல் களத்தில் பல கணக்குகள் வட்டமடித்து வருகின்றன.

அன்புமணி ராமதாஸ் தரப்பு ஆரம்பத்திலிருந்தே அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டியது. அதிமுக தரப்பில் பாமகவுக்கு 17 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

இதனால் அன்புமணி தரப்பு அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. ஆனால் ராமதாஸ் தரப்பு என்.டி.ஏ.வில் சேர எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் அதிமுக தலைமை ராமதாஸுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு தயக்கம் காட்டுகிறது.

இதையும் படிங்க: பாமகவுக்கு 17 தொகுதி?! ஒரு எம்.பி சீட்?! படிந்தது பேரம்! வெளியானது முக்கிய அப்டேட்!!

இந்த இடைவெளியை பயன்படுத்தி பாஜக ராமதாஸுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மறுபக்கம், ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணியை நோக்கி காய் நகர்த்தியது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சியை பாராட்டிய ராமதாஸின் கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. 


ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் பாமகவுடன் கூட்டணி சாத்தியமில்லை என்று கடுமையாக எதிர்த்தார். "ராமதாஸ் பெறாத பிள்ளை திருமாவளவன்" என்று பாமக எம்எல்ஏ அருள் தூது அனுப்பியும் திருமாவளவன் இறங்கவில்லை. திமுகவும் விசிகவை இழக்க விரும்பாததால் ராமதாஸின் திமுக கனவு தற்காலிகமாக முடங்கியது.

இதனால் த.வெ.க.வுடன் கூட்டணி என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் தலித் வாக்கு வங்கியில் எதிர்மறை தாக்கம் ஏற்படும் என்று த.வெ.க. நிராகரித்தது. இப்போது ராமதாஸ் தரப்பு மீண்டும் திமுக அல்லது வேறு கூட்டணியை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அன்புமணி இன்று வெளியிட்ட அறிக்கையில் திமுக அரசை "ஓட்டைக் கப்பல்" என்று கடுமையாக விமர்சித்தார். "திமுக அரசு மக்களின் கோபத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஓட்டைக் கப்பல். ஸ்டாலின் கிழிந்த காகிதங்களால் ஒட்ட முயல்கிறார். அது பயனற்றது" என்று கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ராமதாஸின் நகர்வுகளை தடுக்கும் முயற்சியா என சந்தேகம் எழுந்துள்ளது.

மூத்த தலைவர் ஜி.கே.மணி கூறியபடி, பாமக தனித்து போட்டியிடாது, கூட்டணி அமைத்தே களம் இறங்கும். ராமதாஸ் தனது அரசியல் அனுபவத்துடன் அதிமுகவுடன் இணைவாரா அல்லது கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் இடம் பிடிப்பாரா என்பது தான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி. தமிழக அரசியல் களம் இப்போது பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்!
 

இதையும் படிங்க: விஜய் ஆரம்பித்து வைத்த கோஷம்!! காங்., விடாப்பிடி! திமுக, கனிமொழியிடம் ராகுல்காந்தி பேரம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share