×
 

“விஜய் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது...”- பாமக வேட்பாளர் திலகபாமா கடும் வாக்குவாதம்... பரபரப்பு காரணம்?

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் விஜய் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என திமுக, பாமக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. 

பெரம்பூரில் தவெக தலைவர் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டு விட்டது. அங்குள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் பரிசீலனையில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர். இதில் 6வது மனுவாக தவெக தலைவர் விஜய்யின் வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது, அதில் இடம்பெற்று விவரங்களை தேர்தல் அதிகாரி வாசித்து காண்பித்தார். அதன்பிறகு அந்த மனு ஏற்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஆனால் தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் மட்டுமின்றி திருச்சி கிழக்கிலும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதில் முதல் நாளான மார்ச் 30ம் தேதி அன்று  பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுவை விஜய் தாக்கல் செய்திருந்தார், அதில் குற்றவழக்குகள் இல்லை என குறிப்பிடப்பட்டிருந்ததோடு, வயதும் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கடந்த வியாக்கிழமை அன்று திருச்சி கிழக்கில் விஜய் தாக்கல் செய்த மனுவில் சென்னையில் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலை ஏற்படுத்தியது தொடர்பான வழக்கு மற்றும் 2025 மாநாட்டில் பவுன்சர்கள் நடந்து கொண்ட விதம் தொடர்பான வழக்கு என இரண்டு வழக்குகள் தன் மீது நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!

அதுமட்டுமின்றி விஜய் பயன்படுத்தி வரும் 6 கோடி ரூபாய் மதிப்பிலான கேர்வேன் அவர் பெயரிலேயே உள்ளது. ஆனால் அதனை விஜய் சொத்து பட்டியலில் சேர்க்கவில்லை. இந்த விவரங்கள் சேர்க்காமல் விட்டு விட்டால் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கருதி, புதிய ஆவணங்களை தேர்தல் அதிகாரிகளிடம் விஜய் தரப்பில் சமர்பிக்கப்பட்டது. 

ஒரு வேட்புமனுவில் பல குளறுபடிகள் உண்மையை மறைக்கும்  விதமாக இருந்ததை சுட்டிக்காட்டி முதலில் பாமக வேட்பாளர் திலகபாமா எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் போதிய ஆவணங்கள் இருப்பதாகக்கூறி தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்ததால், அவருடன் திலகபாமா தரப்பினர், திமுக ஆர்.டி.சேகர் தரப்பினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள்  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையும் படிங்க: ஸ்டன் ஆன பெரம்பூர்... கையில் தராசுடன் வந்த வேட்புமனு தாக்கல் செய்த திலகபாமா... ஷாக்கிங் காரணம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share