×
 

கோவை அதிமுக கோட்டை... திமுக ஆட்சியில் குப்பைக்கு கூட வரி..! எஸ்.பி.வேலுமணி பேட்டி..!!

கோவை அதிமுகவின் கோட்டை என முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி தெரிவித்தார்

கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு அதிமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். வேட்பாளர்கள் அறிவிக்கபட்ட நிலையில், கோவை வந்த வேலுமணிக்கு, கோவை மாவட்டத்தில் போட்டியிடும் 8 அதிமுக வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் வந்து வரவேற்பு அளித்தோடு அவரை தூக்கி ஆடினர். இதற்கு பின்பு முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவை மாவட்டத்தில் முழுமையாக வேட்பாளர் அறிவிக்கபட்டுள்ளது,

நீலகிரி ,திருப்பூர் மாவட்டம் உட்பட தமிழக முழுமைக்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும், சென்னை தவிர மற்ற இடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், கோவை மாவட்டத்திற்கு எங்களுக்கு வேட்பாளராக வாய்ப்பு கொடுத்து இருக்கிறார் எனவும் , கோவை மாவட்டத்தை பொறுத்தவரை எப்பொழுதுமே அதிமுக கோட்டை எனவும் தெரிவித்தார்.

மிகப்பெரிய வளர்ச்சியை , ஐம்பது ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை எடப்பாடி முதல்வராக இருக்கும் பொழுது கொடுத்திருக்கிறோம் எனவும், செய்ய முடியாத திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம் என தெரிவித்தார். அத்திக்கடவு அவனாசி திட்டம் , விமான நிலைய விரிவாக்கம், மேம்பாலம் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். கடந்த ஐந்தாண்டுகளாக இங்கே எந்த திட்டமும் வரவில்லை எனவும், ஆகவே அதிமுக ஆட்சி எடப்பாடி தலைமையில் வருவது உறுதி எனவும் தெரிவித்தார். அவிநாசி தொகுதியை சேர்த்து 11 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்த அவர், கோவை மட்டுமின்றி திருப்பூர் , நீலகிரி மாவட்டங்களிலும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தவெக டூ மீண்டும் அதிமுக..!! எஸ்.பி.வேலுமணி சொன்ன பரபரப்பு விஷயம்..!! அரசியல் களத்தில் பூகம்பம்..!!

தமிழகம் முழுவதும் 210 தொகுதிகளை பெறுவோம் எனவும் தெரிவித்தார். திமுக ஆட்சியில் ஐந்து ஆண்டுகளாக எந்த திட்டங்களும் நடைபெறவில்லை என தெரிவித்த அவர், அதிமுக ஆட்சி வந்த உடன் மீண்டும் வளர்ச்சி கொண்டு வரப்படும் எனவும் மக்கள் எதிர்பார்த்த திட்டங்களை கொண்டு வருவோம் எனவும் தெரிவித்தார். இந்த ஆட்சியில் குடிநீர் வரி , சொத்து வரி உட்பட அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், மக்கள் தெளிவாக இருக்கின்றனர், குப்பைக்கு கூட வரி போடுகின்றனர் எனவும் தெரிவித்தார்.களத்தில் நேர்மையாக மக்களைச் சந்திப்போம் , வாக்குகளை பெறுவோம் , வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

அதிமுக பெரிய கட்சி , கூட்டணிக் கட்சிகளிடம் சில எதிர்பார்ப்புகள் இருக்கலாம் , சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கும் , அவை காலப்போக்கில் சரியாகிவிடும் என தெரிவித்த அவர், எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். எங்களது வேட்பாளர்கள் அறிவித்து விட்டனர் , ஆனால் இன்னும் திமுக வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என தெரிவித்த அவர், அவர்கள் அறிவித்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். திமுக வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்னதாக எதிர்பார்ப்புகளை சொல்ல முடியாது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: எங்க கட்சிக்கு வாங்க..! விஜயே கூப்பிட்டாராம்..! அதிமுக EX. அமைச்சருடன் பேச்சுவார்த்தை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share