×
 

தோல்வி பயத்துல என்னலாம் பண்ணுறாங்க பாருங்க!! அஞ்சி ஆயிரம்! தேர்தல் நேரத்து பணம் - திமுகவின் Patchwork-ஐ விளாசும் இபிஎஸ்!

மாதம் 2000 ரூபாய் என்று நான் அளித்த அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும் , வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில், இந்த அறிவிப்பு வெளியில் வருகிறது பாருங்கள்.

தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.5,000 தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் முன்பணமாக வழங்கியுள்ளார். 

தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சி தொடர்ந்தால், மாதாந்திர உரிமைத் தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்குவோம் என்று அவர் அறிவித்துள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: “2023 செப்டம்பர் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். 1 கோடி 31 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன.

இதையும் படிங்க: கிராமங்களில் லட்சக்கணக்கில் புழங்கும் பணம்! காரணம் இதுதான்! அமைச்சர் செழியன் சொன்ன விஷயம்!!

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ரூ.3,000 உரிமைத் தொகையுடன், கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 சேர்த்து மொத்தம் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைந்தால், மாதாந்திர தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.”

இந்த அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “தேர்தல் தோல்வி பயத்தில் ஸ்டாலின் என்னவெல்லாம் செய்கிறார் பாருங்கள். 28 மாதங்களாக ரூ.1,000 கொடுக்காமல் இழுத்தடித்த அரசு, இப்போது மூன்று மாதத் தொகையுடன் கோடை சிறப்புத் தொகை என்று கொடுக்கிறது. 

 

தேர்தல் தோல்வி பயம், பொம்மை முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா?

28 மாதங்களாக "1000 ரூபாய்" கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து "கோடைக்கால சிறப்புத் தொகை" கொடுக்கிறாராம்.

2024, 2025 ஆண்டுகளில் நமக்கு…

— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) February 13, 2026

2024, 2025இல் கோடைக்காலமே வரவில்லையா? பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகத்தை சீரழித்து விட்டு, தேர்தல் நேர பணத்தால் மக்களை ஏமாற்ற முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “ஸ்டாலின் அரசு கொடுத்தது ரூ.34,000 தான். ஆனால் ஒவ்வொரு குடும்பமும் இழந்தது குறைந்தபட்சம் ரூ.3.5 லட்சம். #விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி என்று அதிமுக வீடு வீடாக சென்று காட்டி வருகிறது.

அதிமுக வாக்குறுதியான மாதம் ரூ.2,000-ஐ கண்டு பயந்துதான் இந்த அறிவிப்பு வந்துள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் என்ற வாக்குறுதியை 5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், 1 கோடி பெண்களை ஏமாற்றியுள்ளனர்” என்று தாக்கினார்.

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறியதாவது: “தமிழக மக்களின் ஆதரவுடன் அடுத்த மூன்று மாதங்களில் அதிமுக ஆட்சி அமையும். அப்போது ‘குல விளக்குத் திட்டம்’ மூலம் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,000 உறுதியாக வழங்கப்படும்.”

இரு கட்சிகளின் அறிவிப்புகளும் தமிழக பெண் வாக்காளர்களை மையமாகக் கொண்டு நடைபெறும் 2026 தேர்தல் களத்தில் பெரும் மோதலை உருவாக்கியுள்ளன. தேர்தல் நெருங்கும் நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டம் மையப் பிரச்சினையாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: இன்னைக்கு குட்மார்னிங் மட்டுமில்ல... சூப்பர் மார்னிங்..! உணர்ச்சிப் பெருக்கின் உச்சத்தில் முதல்வர் ஸ்டாலின்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share