×
 

விஜய் இன்னும் யார் கிட்டயும் சிக்கல!! அதான் பேசுறாரு! அதிமுக - பாஜகவை விளாசிய துரைமுருகன்!

தி.மு.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் மத்திய அரசை கண்டித்து காட்பாடியில் உள்ள அவரது வீட்டில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் கருப்பு ஆடை அணிந்து கருப்புக் கொடி ஏற்றினார். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை முதலமைச்சர் தலைமையில் திமுகவினர் தீயிட்டு எரித்து தீவிர போராட்டம் நடத்தினர். “மத்திய பாஜக அரசின் மோசடியான மசோதாவை இறுதி வரை எதிர்ப்போம்” என முழக்கமிட்டபடி திமுக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தனது சொந்த ஊரான காட்பாடியில் உள்ள வீட்டில் கருப்புக் கொடி ஏற்றினார். கையில் கருப்புக் கொடியுடன் மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தார். துணை மேயர் சுனில் குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சரவணன், பகுதி கழக செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தொகுதிக்கு தினசரி ரூ.60 லட்சம் செலவு!! பணத்தை தண்ணீராய் இறைக்கும் திமுக! எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கதறல்!

அப்போது பேசிய துரைமுருகன், “தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டுவது குறித்து பாஜகவிடம் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். அதிமுக பாஜக வலையில் மாட்டிக் கொண்டுள்ளது” என்றார்.

மேலும், “தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் யாரிடமும் இன்னும் அகப்படவில்லை என்பதால் பேசுகிறார். 

பாஜக உள்நோக்கத்துடன் இந்த மசோதாவை கொண்டு வருகிறது. எந்த மாநிலத்தின் தயவும் இல்லாமல் சட்டங்களை இயற்றவும், திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் மத்திய அரசு நினைத்ததை செய்ய முயல்கிறது. 

இதன் மூலம் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு சர்வாதிகார ஆட்சியை நிறுவ பாஜக முயற்சிக்கிறது. இந்த மசோதா குறித்து இதே நிலை நீடித்தால் மக்கள் பெரும் போராட்டத்தில் குதிப்பார்கள்” என்று துரைமுருகன் எச்சரித்தார்.

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சத்தில் திமுக தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் முதல் அமைச்சர் துரைமுருகன் வரை கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தியது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: டெல்லி ஓனர்கிட்ட பதில் வாங்கித்தர முடியுமா? இபிஎஸ், பாஜகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நறுக் கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share