×
 

"Drugs-ஐ விடு, Sports-ஐ எடு" போதைப் பொருளுக்கு எதிராக களம் இறங்கும் முதல்வர் விஜய்! அதிரடி முடிவு!

போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதுடன், இளைஞர்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அழைத்துச் செல்வதே இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாக உள்ளது.

சென்னை: போதைப் பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஒரே நேரத்தில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சென்னையில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையேற்று போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்கிறார்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப் பொருள் பயன்பாட்டை தடுப்பதுடன், அதன் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போதைப் பொருட்களால் ஏற்படும் சமூக மற்றும் உடல்நல பாதிப்புகளை தடுப்பதில் அரசு மட்டுமின்றி பொதுமக்கள், பெற்றோர், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வர் விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநிலக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்க உள்ளனர். முதல்வர் விஜய்யுடன் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.

இதையும் படிங்க: ரூ.22,100 கோடி திட்டம்! கோவை–மதுரை மெட்ரோ கனவுக்கு மீண்டும் உயிர்? அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்!

நிகழ்ச்சியின் போது போதைப் பொருள் ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு முதல்வர் விஜய் விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார். இதன் மூலம் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றும் காவல்துறையினரை ஊக்கப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் இதில் பங்கேற்கச் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதுடன், இளைஞர்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அழைத்துச் செல்வதே இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாக உள்ளது.

கடந்த ஜூன் 26-ம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தையும் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். மெரினாவில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து அவரும் ஓட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் ஒரே நாளில் நடைபெற உள்ள உறுதிமொழி நிகழ்ச்சி, போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மேலும் தீவிரப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பேரிடர் மேலாண்மையில் தமிழக அரசுக்கு மத்திய குழு பாராட்டு! ஆனால் இந்த விஷயத்தில் இன்னும் வேகம் தேவை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share