×
 

அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?... விஜய் பற்றி வந்து விழுந்த கேள்வி... செய்தியாளர்களிடம் கொந்தளித்த தமிழிசை...!

மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு பணிகளில் அவசரம் வேண்டாம். அடுத்த மாதம் குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில், இன்னும் பல பணிகள் முடிவடையாமல் உள்ளது.

தொகுதி மறுவரையறை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி தமிழக அனைத்துக்கட்சி எம்.பிக்களின் கூட்டத்தை முதல்வர் நடத்தியிருந்தார். இந்தக் கூட்டத்தில் 'தொகுதி மறுவரையறையே செய்யப்பட வேண்டாம். இப்போது இருக்கும் அதே 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையையே தொடரலாம்' என முடிவெடுக்கப்பட்டது. 

இதுதொடர்பாக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் தனி தீர்மானமும் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானத்தின் போது பேசுகையிலும் 'தொகுதி எண்ணிக்கைகளை மாற்றாமல் அப்படியே 543 என்ற எண்ணிக்கையிலேயே தொடர வேண்டும். இதுவே தமிழகத்தின் ஒருமித்த குரல்' எனப் பேசியிருந்தார். திமுகவே முதல்வர் விஜய்யின் தீர்மானத்தை ஆதரித்தனர்.

ஆனால் நேற்று தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்பு பேசும் போது, “'மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது. தொகுதி மறுவரையறையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ சதவீதம் குறையாது என்பதற்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் கொடுக்கப்பட வேண்டும்' எனக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

இதையும் படிங்க: ஸ்மைல் ப்ளீஸ் நண்பா!! போட்டோகிராஃபர்களை வீடியோ எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் விஜய்! சட்டசபையில் சுவாரஸ்யம்!

இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

மதுரையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  தென்மாநில முதலமைச்சர் மாநாடு ஆரோக்கியமான ஒன்று.மத்திய அரசு தென்மாநிலங்களை பற்றி கவலையில்லை என்று சொல்வார்கள். ஆனால், அமித்ஷா தென்மாநிலங்கள் மீது கவனம் செலுத்துகிறார். கோதாவரி - காவிரி இணைப்பு விவகாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது.

மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு பணிகளில் அவசரம் வேண்டாம். அடுத்த மாதம் குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில், இன்னும் பல பணிகள் முடிவடையாமல் உள்ளது.

இதை நாங்கள் சுட்டிக்காட்டுவது பக்தியால் தான், பகையால் அல்ல. மதுரை குப்பை மாநகரமாக உள்ளது. குப்பையில் கூட ஊழல் செய்கிறார்கள். அதை இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும்.

தொகுதி மறுவரை விவகாரத்தில் விஜய் பல்டி அடித்துவிட்டார் என விமர்சிக்கிறார்கள்.  சரியான விகிதாசாரம் பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் சொன்னதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?  எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்தாரா விஜய்?... தவெக ஐ.டி.விங்க் கொடுத்த ஆணித்தரமான விளக்கம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share