×
 

திமுக எதிராக வந்த சர்வே!! முதல்வர் ஸ்டாலின் திக்! திக்!! ரூ.5000 மகளிர் உரிமைத்தொகை இதுக்குதானா? வெளியான திடுக்!

சட்டசபை தேர்தலில் வென்று தொடர்ந்து 2வது முறை ஆட்சி அமைத்து, இந்த வரலாற்றை மாற்ற வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் திடீரென 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக அரசு எடுத்த இந்த முடிவுக்கு பின்னால் உளவுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தந்தை கருணாநிதியால் தொடர்ந்து இரு முறை ஆட்சி அமைக்க முடியாத வரலாற்றை மாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறார். அதிமுக பிளவுபட்டு எதிர்க்கட்சிகள் பலம் இழந்ததால், தங்கள் கூட்டணி வலுவாக இருப்பதால் எளிதில் வெற்றி பெறலாம் என்று ஸ்டாலின் நம்பினார்.

ஆனால் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக, அமமுக இணைந்ததும், நடிகர் விஜய்யின் திரளான கூட்டங்களும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தின.

இதையும் படிங்க: தோல்வி பயத்துல என்னலாம் பண்ணுறாங்க பாருங்க!! அஞ்சி ஆயிரம்! தேர்தல் நேரத்து பணம் - திமுகவின் Patchwork-ஐ விளாசும் இபிஎஸ்!

இதையடுத்து கள நிலவரத்தை அறிய திமுக மேலிடம் பல்வேறு சர்வேகளை நடத்தியது. பெண்கள், இளைஞர்கள், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர், நடுத்தர மக்கள், கொங்கு, தெற்கு, வடக்கு, மத்திய மண்டல மக்கள் என பிரித்து கருத்தறியப்பட்டது.

இதில் விஜய் 15 சதவீதத்துக்கும் மேல் ஓட்டு பெற வாய்ப்புள்ளது தெரிய வந்தது. திமுகவின் வாக்கு வங்கியான சிறுபான்மையினரிடமும், பெண்கள் - இளைஞர்களிடமும் கணிசமான ஓட்டுகள் விஜய்க்கு செல்லும் என்று சர்வே கூறியது.

விஜய் 20 சதவீத ஓட்டுகளை பெற்றால் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்படும் என்ற கணிப்பும் வந்தது. 2016 போல் வெற்றி கைநழுவி விடக்கூடாது என்று ஸ்டாலின் முடிவெடுத்தார். அதனால் பெண்களின் வாக்கை மொத்தமாக அறுவடை செய்ய மகளிர் உரிமைத் தொகை பெறும் குடும்பத் தலைவிகளுக்கு 5,000 ரூபாய் திடீர் கொடுப்பனவாக வழங்கப்பட்டது.

திமுக உயர்மட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது: "சிறுபான்மை இளைஞர்களும் பெண்களும் விஜய்க்கு ஓட்டுபோடுவர் என்ற சர்வே முடிவால் ஸ்டாலின் அதிர்ச்சியடைந்தார். பெண் வாக்குகளை தக்கவைக்க இந்த உத்தி எடுக்கப்பட்டது. இது தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்."

இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகளிடம் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. "தேர்தல் இன்ப அதிர்ச்சி" என்று அழைக்கப்படும் இந்த 5,000 ரூபாய் பெண்களின் வாக்கை திமுகவுக்கு திருப்பும் முயற்சியா என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. 2026 தேர்தல் களம் இன்னும் சுவாரசியமடைந்து வருகிறது.

இதையும் படிங்க: கிராமங்களில் லட்சக்கணக்கில் புழங்கும் பணம்! காரணம் இதுதான்! அமைச்சர் செழியன் சொன்ன விஷயம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share