×
 

கூட்டணிக்கு பேரு வைக்கவே திணறும் பழனிசாமி! மோடி, அமித்ஷா கோச்சுப்பாங்களே!! முதல்வர் ஸ்டாலின் கிண்டல்!

தேர்தல் அறிக்கைக்கு கன்டென்ட் கொடுப்பதே ஸ்டாலின் திட்டம் தான். இந்த திட்டம் தமிழகத்தில் இருக்கும் வரை தமிழகத்தை ஸ்டாலின் தான் ஆட்சி செய்வான்.

திருச்சி, மார்ச் 9: சிறுகனூரில் நடைபெற்ற திமுக 12-வது மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றினார். திமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்ட அவர், எதிர்க்கட்சிகள் திமுக திட்டங்களை காப்பியடித்து தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக கடுமையாக விமர்சித்தார். 

“தேர்தல் அறிக்கைக்கு கன்டென்ட் கொடுப்பதே ஸ்டாலின் திட்டம்தான். இந்த திட்டம் தமிழகத்தில் இருக்கும் வரை தமிழகத்தை ஸ்டாலின் தான் ஆட்சி செய்வான்” என்று தன்னம்பிக்கையுடன் கூறினார்.

“மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு நிதி ஒதுக்க மறுக்கிறது. ஆனால் அதே அரசு தமிழகத்தை முதல் மாநிலம் என்று கூறுகிறது. உலக பத்திரிகைகள் சூப்பர் ஸ்டார் மாநிலம் என்கின்றன. அந்த அளவுக்கு கெத்தாக முன்னேறியுள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான தடைகளை தாண்டி வந்துள்ளோம். 11.19 சதவீத பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளோம். செய்த சாதனைகளை சொல்ல முடியாத அளவுக்கு பட்டியல் நீளமானது” என்று ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விரைவில் வெளியாகிறது தேர்தல் அறிக்கை!! யாராலும் நிறுத்த முடியாது! திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் ஃப்யர்!!

மத்திய அரசை கடுமையாக சாடிய அவர், “கல்வி நிதி, ஜல்ஜீவன் திட்ட நிதி, 100 நாள் வேலை உறுதி திட்ட நிதி, பேரிடர் நிதி, மெட்ரோ திட்ட நிதி எதையும் தரவில்லை. கோவை, திருச்சி, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு கூட நிதி இல்லை. ஆனால் கவர்னர் மூலம் குடைச்சல், நீட் தேர்வில் மாணவர்கள் உயிரோடு விளையாட்டு, ஹிந்தி திணிப்பு, ரெய்டு மிரட்டல் என்று தொடர்கிறது. இதுதான் தேஜ ஆட்சி. தமிழகத்துக்கு எந்த நன்மையும் செய்யாத இவர்களுக்கு எப்படி ஓட்டு போடுவார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

“என்டிஏவுக்கு தமிழகத்தில் நோ என்ட்ரி தான். டப்பா என்ஜினுக்கு நோ என்ட்ரி. ஸ்டாலினும் திமுகவும் இருக்கும் வரை பாஜகவால் தமிழகத்தை ஆட்சி செய்ய முடியாது. அந்தர்பல்டி அடித்தாலும், முகமூடி போட்டு வந்தாலும், புதிய கூட்டணி வைத்தாலும், ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டினாலும் தமிழகம் உங்களுக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் தான்” என்று சவால் விட்டார்.

மகளிர் உரிமைத்தொகை, காலை உணவு திட்டம், வீடு தேடி ரேசன், நான் முதல்வன் போன்ற திட்டங்களை யாராலும் நிறுத்த முடியாது என்றும், நிறுத்தினால் மக்கள் விரட்டிவிடுவார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். “நமது திட்டங்களால் பயன் அடைந்தவர்கள் ஓட்டு போட்டால் முழு வெற்றி உறுதி. அதை நாம் உறுதி செய்ய வேண்டும்” என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

மாநாடு முழுவதும் தொண்டர்களின் ஆரவாரம், முழக்கங்கள் என பிரமாண்ட காட்சியாக இருந்தது. திமுகவின் வெற்றி உறுதியை மீண்டும் உறுதிப்படுத்திய மாநாடாக இது அமைந்துள்ளது.

இதையும் படிங்க: தமிழக கவர்னர் ஆர்.வி.லோகர்!! நாளை மறுநாள் சென்னை வருகை!! 12ம் தேதி பொறுப்பேற்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share