#BREAKING விஜயபாஸ்கர்களுக்கு தவெகவில் பதவி... அதிமுக மாஜிக்களுக்கு விஜய் கொடுத்த அதிரடி ஆஃபர்...!
டாக்டர் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், மரகத குமரவேல், ராஜகோபால் உள்ளிட்டோருக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக வெற்றி கழகத்தில் புதிதாக இணைந்துள்ள நிர்வாகிகளுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
டாக்டர் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், மரகத குமரவேல், ராஜகோபால் உள்ளிட்டோருக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக வெற்றி கழகத்தில் பொதுவாகவே புதிதாக இணைந்தவர்கள், அதாவது அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தவர்கள், மாவட்டச் செயலாளர் பொறுப்பு கேட்டதன் காரணமாகவே அவர்களுக்குப் பொறுப்புகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.
இதையும் படிங்க: விஜய் அரசுக்கு பேரதிர்ச்சி கொடுத்த இபிஎஸ்... தமிழகம் முழுவதும் அதிமுகவினருக்கு பறந்த அதிரடி உத்தரவு...!
இந்தச் சூழலில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனைவரிடமும் ஆலோசிக்கப்பட்ட பிறகு, புதிதாக வந்தவர்களுக்குப் பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தவெக தலைவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையைப் பொறுத்தவரை, மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்டோருக்கான பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக வெற்றி கழகம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து மக்கள் தன்னிச்சையாகவும் பெருந்திரளாகவும் தங்களுடைய ஆதரவை அளித்து வருவதை இந்த நாடே அறியும் என்றும் தவெக தலைவர் இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், தமிழக வெற்றி கழகம் மக்களுக்காக எப்போதுமே முதலும் முன்னோடியுமாக இயங்கி வருகிறது. இதனால், கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தச் சூழலில் மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மாவட்ட அமைப்புச் செயலாளர்களைப் பொறுத்தவரை, டாக்டர் சி. விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இரண்டாவதாக, கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளராக எம்.ஆர். விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அடுத்தபடியாக, இசக்கி சுப்பையா தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அதேபோல், துணைப் பொதுச் செயலாளர்களாக எம்.ஆர். விஜயபாஸ்கர், மரகத குமரவேல் மற்றும் நாங்குநேரியைச் சேர்ந்த ராஜகோபால் ஆகியோருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், தமிழக வெற்றி கழகத்தில் ஏற்கனவே 120-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் இருக்கக்கூடிய நிலையில், அதனை மேலும் விரிவாக்கம் செய்யக்கூடிய பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இருப்பினும், அதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த மரகத குமரவேல், எம்.ஆர். விஜயபாஸ்கர், டாக்டர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் பொறுப்புக்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.
பல்வேறு கட்சிப் பணிகளின் காரணமாக தாமதமானதாகக் கூறப்பட்டாலும், மாவட்டச் செயலாளர்களின் அறிவுறுத்தல் மற்றும் அவர்களுடைய நெருக்கடியே இதற்குத் தாமதத்திற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், அதிமுகவில் இருந்து விலகி, தங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த டாக்டர் சி. விஜயபாஸ்கருக்கு புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராக அமைச்சர் பர்வேஸ் தற்போது பதவி வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல, கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே மாவட்டச் செயலாளர் ஒருவர் இருக்கும் சூழலில், கரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வேண்டும் என்று எம்.ஆர். விஜயபாஸ்கரும் அழுத்தம் கொடுத்திருந்தார். இருப்பினும், அவருக்கு கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் பொறுப்பே வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையாவுக்கும் தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், எம்.ஆர். விஜயபாஸ்கர், மரகத குமரவேல், ராஜகோபால் உள்ளிட்டோருக்கு துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கி தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: “நீங்க முதலமைச்சர் ஆகலைன்னா...” - சி.எம். விஜயை நோக்கி ‘நறுக்’ பாயிண்டுகளை அடுக்கிய சீமான்...!