×
 

தவெக கூட்டணியில் பாமக இணைவா?... அன்புமணி பெயரைச் சொல்லி வன்னியரசு கொடுத்த பதிலடி...!

முறைப்படி ஏதாவது அறிவிப்பு வந்திருந்து அதிலிருந்து ஏதாவது கேள்விகளை நீங்கள் கேட்டால் அமைச்சர் என்ற முறையில் பதில் கூறலாம். 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும் சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னியரசு பேசுகையில்

மகளிர் விடியல் பயணம் திட்டத்தில் விடியல் என்ற பெயர் நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு,  அப்படி இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஏதாவது இருக்கலாம் . முறைப்படி ஏதாவது அறிவிப்பு வந்திருந்து அதிலிருந்து ஏதாவது கேள்விகளை நீங்கள் கேட்டால் அமைச்சர் என்ற முறையில் பதில் கூறலாம்.  இதற்கு தன்னால் பதில் கூற முடியாது.  எனவே இதை தெரிந்து கொண்டு தான் நான் பேச வேண்டும். அரைகுறையாக பதில் அளிக்கக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.

தவெக - பாமக கூட்டணி குறித்த கேள்விக்கு,  இதுகுறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். யூகமாக கேட்கின்றீர்கள், இது தொடர்பாக மதிப்புக்குரிய பாமக தலைவரிடம் கேளுங்கள். நாங்கள் இந்த கூட்டணியில் தெளிவாக இருக்கின்றோம். சமூக நீதித்துறையில் நான் சுதந்திரமாக செயல்பட தமிழ்நாடு முதலமைச்சரும் எங்கள் தலைவரும் வழிகாட்டி உள்ளார்கள். வேறு எதிலும் நாங்கள் கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமைச்சர் என்.ஆனந்த் கூட்டத்தை புறக்கணித்த வன்னியரசு... சிறுத்தையை ஓரங்கட்ட தயாராகிறதா தவெக?

விசிக தலைவர் திருமாவளவனுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிய  கருத்துக்கு பதிலளித்த அவர்,  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மதிப்பும், மரியாதையும் எப்போதும் உண்டு என்றும், தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி ஐந்தாண்டுகள் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. இதனால் அண்ணன் வைகோ போன்றவர்கள் இதுபோன்று பேசுவது ஏற்புடையது அல்ல. அவரைப் போன்ற மூத்த தலைவர்களிடமிருந்து இது போன்ற கருத்துக்கள் வருவது வருத்தம் அளிக்கிறது என அவர் தெரிவித்தார்.

கூட்டணியில் ஒரு காலும்,வேறொரு இடத்தில் ஒரு காலும் திருமாவளவன் வைத்துள்ளார் என நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு, நயினார் நாகேந்திரன் எதை புரிந்து கொண்டு பேசுகின்றார் என தெரியவில்லை. அவர்களெல்லாம் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி தொடரக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஆளுநரின் கருத்துக்களை அப்படியே வழிமொழிய கூடியவர்கள் அவர்கள் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி தொடர வேண்டும் என்ற அக்கறையில் பேசக்கூடியவர்கள் அல்ல. தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றுள்ளோம் எங்களுக்கு இல்லாத அக்கறை அவருக்கு இருக்காது எங்களுக்கு தான் அதில் அக்கறை உள்ளது.

எங்களிடம் உள்ள அக்கறை சமூக நீதி அக்கறை இந்த ஆட்சி தொடர வேண்டும் என்கின்ற அக்கறை இந்த ஆட்சி மதச்சார்பற்ற ஆட்சியாக இருக்க வேண்டும் என்ற அக்கறை. ஆகவே நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரியின் அக்கறை இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதற்கு மாற்றாக அவர்கள் வேறொரு யுத்தியை கையாளுகின்றார்கள். நாங்கள் எப்போதுமே எங்களுடைய கால்கள் சமூக நீதியின் கால்கள் எங்களுடைய கால்கள் என்றும் இந்த ஆட்சியை ஆதரிக்க கூடிய கால்களாகத்தான் இருக்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நாங்கள் நிற்கவில்லை. நாங்கள் தெளிவாக இருக்கின்றோம் நாங்கள் அளந்து வைக்கின்றோம் ஆழமாக வைக்கின்றோம் இந்த ஆட்சி ஐந்தாண்டுகள் தொடர வேண்டும் என்ற நிலையில் தான் நாங்கள் இருக்கின்றோம் என அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே பகீர்... தமிழகத்தை நடுங்கவிட்ட தந்தை, மகன் இரட்டை கொலை... முக்கிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share