சரியும் செல்வாக்கு; திமுகவுடன் கூட்டு சேர்ந்ததால் தான் எல்லாம் போச்சு.. புலம்பி தீர்த்த திருமா..!
ஆளுங்கட்சி கூட்டணியில் இருப்பதால் தான் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என திருமாவளவன் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஆளும் கூட்டணியில் இருப்பதால் கூட்டணிக் கட்சிக்கு சலுகை வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கக் கூடாது என்பதற்காக அனுமதி மறுக்கப்படுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வடகாட்டில் நடந்தது ஜாதிய மோதல் தான் என குற்றச்சாட்டிய அவர், ஏற்கனவே அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் பிரச்சனையில் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்க மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தவறிவிட்டது. 15 வருடமாக அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கை காரணம் காட்டி பட்டியலின மக்களையும் வழிபட கூடாது என தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் தான் சமூக பதற்றம் ஏற்படுகிறது எனக்கூறினார்.
பேச்சு வார்த்தை என்ற பெயரில் அதிகாரிகள் பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். தமிழ்நாட்டில் எந்த சேரி கொளுத்தப்பட்டாலும் அங்கு எஸ்பி , கலெக்டர் அங்கு போகமாட்டார்கள். அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் வழிபட மரபு படி வடகாடு பட்டியலின மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும், ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும்,
இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? திடீர் சந்தேகம் கிளப்பும் திருமாவளவன்.. விஜய் வியூகம் குறித்தும் ஓபன் டாக்!
மாற்று சமூக மக்களை அந்த இடத்தில் அனுமதிக்க கூடாது. அந்த கிராமத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையை 24 மணி நேரத்தில் அப்புறப்படுத்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு, கைது செய்யப்பட்ட பட்டியலின இளைஞர்களை உடனே விடுவிக்க வேண்டும், அதில் 4 பேர் மாணவர்கள், மாணவர்கள் என்று கூட பாராமல் போலீசார் பட்டியலின இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர், வழக்குகளை திரும்ப பெற வேண்டும். இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளை உடனே அங்கிருந்து மாற்ற வேண்டும், அல்லது வடகாடு வழக்கை சிபிசிஐடி போன்ற புலனாய்வு அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும்
தமிழ்நாடு முழுவதும் இது போன்ற சம்பவங்கள் அங்காங்கே நடந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை மற்றும் காவல்த்துறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், வேங்கைவயல் வழக்கில் பட்டியலின இளைஞர்களையே குற்றவாளிகளாக்கி விட்டனர், ங்கைவயல் பிரச்சனை உள்ளாட்சி தேர்தல் பிரச்சனை. ஆனால் அதனை அப்படியே மாற்றிவிட்டனர். வேங்கைவயலில் நடந்தது தான் வடகாட்டிலும் நடக்கிறது. ஏன் என்றால் எஸ்பி முதலிலே சொல்லிவிட்டார், வடகாடு பிரச்சனை ஜாதிப் பிரச்சனை இல்லை என்று.
காவல் துறை அதிகரிகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறையாக கையாளவும், பாதிக்கப்பட்ட பட்டியலின பக்கம் நின்று விசாரணை நடத்தவும் காவல்த்துறையினருக்கு விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இது குறித்து நான் முதலமைச்சரிடம் வலியு றுத்துவேன் எனத் தெரிவித்தார்.
ஏற்கனவே திமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களுக்கு விசிக குரல் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீடித்து வந்த நிலையில், தற்போது திருமாவளவனே இப்படி பேசியிருப்பது கூட்டணிக்குள் சலசலைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அந்த கூட்டணி நீடிக்குமா? எங்க கூட்டணியை எதிர்க்க ஆளே இல்லை... அடித்து சொன்ன திருமாவளவன்!!