×
 

சினிமா மட்டுமில்ல! அரசியலிலும் தெலுங்கை காபி அடிக்கும் விஜய்!! பிரசாரத்தில் ஜெகன்மோகன்! பவன் கல்யாண் பாணி!

நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தில் தெலுங்கு நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பாணியை பெருமளவு பின்பற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சினிமாவில் மாஸ் ஹீரோவாக உருவெடுக்க கில்லி, போக்கிரி போன்ற படங்கள் விஜய்க்கு பெரும் உதவியாக இருந்தன. ஆனால் அந்த இரு படங்களும் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடித்த ‘ஒக்கடு’ மற்றும் ‘போக்கிரி’ ஆகிய படங்களின் தமிழ் ரீமேக்குகள் தான். 
ஜனநாயகன் படமும் பாலகிருஷ்ணா நடித்த ‘பகவந்த் கேசரி’யின் ரீமேக். இதே போன்று அரசியலிலும் விஜய் ஆந்திர அரசியல்வாதிகளின் உடை, பாவனை, பிரசார உத்திகளை பின்பற்றி வருகிறார்.

த.வெ.க. தொடங்கும் முன்பு விஜயின் அரசியல் தோற்றம் குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் இடையே பெரும் விவாதம் நடைபெற்றது. அப்போது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உடையை (வெள்ளை சட்டை, காக்கி பேன்ட்) பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. 

2024 ஜூலை முதல் விஜய் அந்த உடையிலேயே அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். ஜெகனை சந்தித்தபோது, “பஸ் யாத்திரை, நடைபயணம் செய்யுங்கள்” என்று அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் விஜய் நடைக்கு ‘நோ’ சொல்லிவிட்டார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு!! தேர்தல் களத்தில் ரூ.3000 கோடியை புரளவிட்ட திமுக!!

பின்னர் ஆந்திர நடிகர் பவன் கல்யாணின் அரசியல் பாணி விஜயை ஈர்த்தது. திடீரென கண் கலங்குவது, ஆவேசமாகப் பேசுவது, வயதானவர்களிடம் ஆசி வாங்குவது, குழந்தைகளைத் தோளில் ஏற்றுவது, சைக்கிள் ஓட்டுவது உள்ளிட்ட பல விஷயங்கள் பவன் கல்யாணிடமிருந்து எடுக்கப்பட்டவை என்று தெரிகிறது. விஜயின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும் இந்த உத்தியை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆனால் உழைப்பை மட்டும் பின்பற்ற முடியவில்லை. ஜெகன் 10 ஆண்டுகள் கடுமையாக உழைத்து முதல்வரானார். பவன் கல்யாணும் 10 ஆண்டுகள் பொறுமையாக காத்திருந்தார். விஜய் மட்டும் ‘வீட்டில் இருந்தபடி’ அரசியல் செய்ய விரும்புகிறார். கட்சி தொடங்கிய 802 நாட்களில் வெறும் 16 நாட்கள் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு 32 நாட்களில் 7 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்துள்ளார்.

வார நாட்களில் பிரசாரம் செய்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் சனிக்கிழமை மட்டும் பிரசாரம் செய்வதாக விஜய் விளக்கம் அளித்தார். இதனால் ‘வீக் எண்ட் அரசியல்வாதி’ என்று கேலி செய்யப்பட்டார். சமீபத்தில் கன்னியாகுமரி பிரசாரத்துக்குப் பிறகும் இரவுக்குள் வீடு திரும்பிவிட்டார்.

ஒரு நாள் பிரசாரம் செய்தால் அடுத்த நாள் ஓய்வு எடுக்க வேண்டிய நிலை, 10 மணி நேரம் இணையத் தொடர்கள் பார்ப்பது, தூக்கம் ஆகியவை விஜயின் வழக்கமாக உள்ளன. இதனால் தமிழகத்தின் 30க்கும் குறைவான தொகுதிகளுக்கே சென்றுள்ளார்.

இருப்பினும் விஜயின் ரசிகர்கள் இந்த அணுகுமுறையை வரவேற்கின்றனர். ஒரு நாள் பிரசாரம் செய்தாலே சமூக வலைதளங்களில் நீண்ட நாட்கள் பேச்சாக இருப்பதால், அடிக்கடி வெளியே வர வேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: விசில் ஊதியபடியே சைக்கிள் ஓட்டிய விஜய்! கன்னியாகுமரியில் தவெக தொண்டர்கள் உற்சாகம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share