2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. அந்த வரிசையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டி ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு மேலும் ஒரு பெருமையைச் சேர்த்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற போட்டியில், ஆரம்பத்திலிருந்தே கடுமையான போட்டி நிலவியது. ஸ்னாட்ச் பிரிவில் முதல் முயற்சியில் சவாலை சந்தித்த ராஜா முத்துப்பாண்டி, அடுத்த முயற்சியில் 126 கிலோ எடையை வெற்றிகரமாகத் தூக்கி தனது கணக்கைத் தொடங்கினார். தொடர்ந்து அதிக எடையை முயன்றாலும் அது வெற்றியடையவில்லை.

பின்னர் நடைபெற்ற கிளின் அண்ட் ஜெர்க் பிரிவில் அவர் சிறப்பான முயற்சியை வெளிப்படுத்தினார். தொடக்க முயற்சி வெற்றியளிக்காத நிலையிலும், அடுத்த முயற்சியில் 160 கிலோ எடையை வெற்றிகரமாகத் தூக்கி மொத்தம் 286 கிலோ எடையைப் பதிவு செய்தார். இந்த செயல்திறனே அவருக்கு வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தது.
இதையும் படிங்க: இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்தவரே பிரதமர் மோடி தான்..!! ராகுல் காந்தி விளாசல்..!!
தங்கப்பதக்கம் வென்ற ராஜா முத்துப் பாண்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பளுதூக்குதலில் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார். கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்துகள் என்று கூறினார். அவரது வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது என்று கூறிய பிரதமர் மோடி., அவரது வருங்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள் என்றார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி தலைமையில்.. தொடங்கியது NDA எம்.பி.க்கள் கூட்டம்..!!