தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் ஒரு சில நாள்கள் மட்டுமே இருப்பதால், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் அதிரடி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன.
ஏப்ரல் 21 மாலையுடன் தேர்தல் பரப்புரையை முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால், பல கட்சித் தலைவர்களும், அக்கட்சிகளில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சித் தலைவர்களும் தமிழ்நாடு முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் துறையூரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பரப்புரை நடத்தினார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் 9 பேரை ஆதரித்து ராகுல் காந்தி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து புகழாரம் சூட்டினார். பாஜக அரசுக்கு நன்றாக தெரியும் முதல்வர் ஸ்டாலின் எதற்காகவும் யாருக்காகவும் கொள்கையிலிருந்து பின் வாங்க மாட்டார் என்று என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்டாலினை பாஜகவால் பணிய வைக்கவே முடியாது..! ராகுல் காந்தி திட்டவட்டம்..!
இந்த தேர்தல் சாதாரணமான தேர்தல் அல்ல என்றும் முந்தைய தேர்தலை விட வித்தியாசமானது எனவும் தெரிவித்தார். தமிழ் மக்களையும் தமிழ் மக்கள் கௌரவத்தையும் வீர உணர்ச்சியையும் குறைத்து மதிப்பிடாதீர்கள் என்று தெரிவித்தார். தமிழ்நாடு சமூக நீதிப் பாதையில் செல்வதை பாஜக விரும்பவில்லை என்று தெரிவித்தார். டிரம்ப் என்ன சொன்னாலும் பிரதமர் மோடி செய்வார் என்றும் அவர் கீழே குதி என்றால் குதித்து விடுவார் எனவும் பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார். பிரதமர் மோடி இந்தியாவையே அமெரிக்காவிடம் விற்று விட்டதாக விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: ட்ரம்புக்கு மோடி.. அமித்ஷாவுக்கு எடப்பாடி..! டெல்லியிலிருந்து ஆள நினைக்கிறாங்க..! ராகுல் காந்தி விளாசல்..!