ராமதாஸ் இன்று தைலாபுரத்தில் அளித்த பேட்டியில், அன்புமணி தலைமையிலான ஒரு கும்பல் பொய் பேசி வருகிறது. அந்த அரசியல் இனி மேல் எடுபடாது என்றும் அரசியலிருந்தே என்னை ஒழித்து கட்ட சதி தீட்டி வருகிறார்கள் என்றும் கடுமையான விமர்சனத்தை மீண்டும் அன்புமணி மீது ராமதாஸ் வைத்திருக்கிறார். மாம்பழம் சின்னம் குறித்து சரியான முறையில் ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும் என்றும் அந்த சின்னம் அன்புமணி ராமதாஸ் பிரிவுக்கு வழங்கப்படவில்லை. நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கிறது என்றும் ராமதாஸ் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.
இதனால் மாம்பழம் சின்னத்திற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்றும் ராமதாஸ் அறிவித்திருக்கிறார். இந்த கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டவர்கள் பொய் பேசுவதையே அரசியலாக கொண்டு செயல்பட்டு வருகிறார்கள் என்றும் அந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு அன்புமணி ராமதாஸ் தலைவர் இல்லை என்றும் அவர்களுக்கு கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை கேட்பதற்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என்றும் அவர் கூறினார். மேலும் பல்வேறு தியாகங்களை செய்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே மணி குறித்து வசைபாடி வருகின்றனர் என்றும் அது மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.
தலைமை தேர்தல் ஆணையம் பொய்யான கூட்டத்திற்கு உடந்தையாக இருக்கிறது என்றும் அதை சட்டரீதியாக நாங்கள் எதிர்கொண்டு முறியடிப்போம் என்றும் தெரிவித்திருக்கிறார். இதனால் அன்புமணிக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியின் அந்த மோதல் மேலும் முற்றியுள்ளது. சின்னம் கட்சிக்கு மீண்டும் ராமதாஸ் உரிமை கோறியிருக்கிறார்.
இதையும் படிங்க: ஓயாத பிரச்சனை..! அன்புமணிக்கு ஏன் அங்கீகாரம்? டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் விளக்கம்..!
ஏற்கனவே ஐயா பாமாக்கா என்ற பெயரில் ஒரு புதிய கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து கேள்வி கேட்டதற்கு அது குறித்து தமக்கு தெரியாது என்றும் தாங்கள்தான் உண்மையான பாமக. பொய் பேசும் அன்புமணி கூட்டத்தை முழுமையாக கட்சியில் விட்டு நீக்கி விட்டோம் என்றும் அவர்கள் கட்சி சின்னம் ஆகியவற்றிற்கு ஒருபோதும் உரிமை கோற முடியாது என்றும் தேர்தல் ஆணையம் பொய்யான தகவல்களுக்கு உடந்தையாக இருக்க கூடாது என்றும் ராமதாஸ் என்று அளித்துள்ள அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.
மேலும் அரசியலிலிருந்து என்னை முழுமையாக ஒழித்து கட்ட ஒரு சதி நடந்து கொண்டிருக்கிறது என்றும் அந்த சதியை தாம் எதிர்கொண்டு முறியடிப்பேன் அன்புமணி ராமதாசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜிகே மணி மீது தவறான பொய்யான வசை பொழிவுகளை நிறுத்த வேண்டும் எனக்கூறியுள்ள அவர், தாங்கள்தான் ஒரிஜினல் பாமக என இன்று தைலாபுரத்தில் அளித்த பேட்டியில் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார். ஊடக தர்மம் என்று சொல்லுவார்கள். ஆனால் சில ஊடகத்தில் அவர்களுக்கு சாதகமாக, அவர்கள் தரப்பு வெற்றி பெற்றதாக பொய்யான பொருட்களை எல்லாம் சில ஊடகங்கள் வெளிப்படுத்தினார். அது ஊடக தர்மத்துக்கு எதிரானது.
எப்பொழுதும் ஒரு பொய் கூட்டம் பொய்யும் பொருட்டுமே அரசியலாக நடத்தி கொண்டிருக்கின்ற ஒரு கூட்டம் நாங்கள் அந்த கூட்டத்தை கட்சியிலிருந்து எடுத்துவிட்டோம், அடிப்படைய உறுப்பினர் பதவியிலிருந்து எடுத்துவிட்டோம். அவரோடு சேர்ந்த சில கூட்டங்கள் பொய் பொய்யா பேசுவது எட்டு கட்டி பேசுவது ஏழமாக பேசுவது மனம் மனம் பொன்படு பேசுவது என்னை மட்டுமல்ல 26 ஆண்டு காலம் ஓய்வின்றி உழைத்து வருகின்ற ஜி.கே.மணி தலைவர் மணியை வசைபாடுவதை நாளும் தொழிலாக கொண்டு செய்து வருகிறார்கள். என்னை அரசியலிருந்து ஒழித்து விட வேண்டும் என்ற நோக்கத்தோட, எதையோ பேசுகிறார்கள்.
இதையும் படிங்க: ராமதாஸ் - விசிக பற்றி செல்வப் பெருந்தகை பேசினாரா? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டனம்..!