அண்டை நாடான பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கானோர் கழுதை வண்டி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதை பயன்படுத்தி பொருட்களை ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றனர். செங்கல் சூளைகள், சலவை தொழில், விவசாயம் போன்றவற்றிலும் கழுதைகள் பயன்பாடு உள்ளது. உலகில் எத்தியோப்பியா மற்றும் சூடானுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானில் தான் கழுதைகள் எண்ணிக்கை அதிகம். இங்கு 56 லட்சம் கழுதைகள் உள்ளன.

இந்நிலையில், சீனாவில் கழுதைத் தோலில் இருந்து 'எஜியாவ்' என்ற பாரம்பரிய மருந்து தயாரிப்பது அதிகரித்துள்ளது. இந்த மருந்து புற்றுநோயை குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இதனால் கழுதை தோலுக்காக அவற்றை, பாகிஸ்தானில் இருந்து அதிகமாக இறக்குமதி செய்கின்றனர். எத்தியோப்பியா, சூடான் நாடுகளில் அதிக கழுதைகள் உள்ளன. அதற்கு பிறகு பாகிஸ்தானில்தான் கழுதைகளின் எண்ணிக்கை அதிகம். கராச்சியின் லியாரி என்ற இடத்தில் பாகிஸ்தானின் மிகப் பெரிய கழுதை சந்தை செயல்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியாவுடன் கைகோர்த்த BRIC நாடுகள்.. சீனாவும் எதிரானதால் கலக்கத்தில் பாக்.,

சுமார் 30 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விற்ற ஒரு கழுதை விலை இப்போது 2 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இதனால் பாகிஸ்தானில் கழுதைகளை நம்பி சிறிய வகையிலான சுமை ஏற்றும் தொழிலை நடத்தி வந்த பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கழுதைகளின் விலை உயர்வுக்கு சீனாவின் மருத்துவ துறை முக்கிய காரணமாகி இருக்கிறது. எஜியாவோ என்கிற பாரம்பரிய சீன மருத்துவத்தில் கழுதையின் தோலில் இருந்து எடுக்கப்படும் வேதிப்பொருள் மருந்தாக பயன்படுகிறது. இதனால் சீனாவில் கழுதை தோலுக்கு டிமாண்ட் அதிகரித்திருக்கிறது.

உலகம் முழுவதும் சுமார் 50 கோடி கழுதைகள் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. பாகிஸ்தானில் மட்டும் இந்த எண்ணிக்கை 59 லட்சம் என்கின்றனர். எஜியாவோ மருத்துவத்தை நாடும் மக்களால் சீனாவின் பொருளாதார வளர்கிறது. அதனால் அந்த நாடு கழுதைகள் வாங்குவதை ஊக்குவிக்கிறது.
சீனாவைத் தவிர மற்ற சில நாடுகளும் கழுதை தோல்களை பல்வேறு தொழில்களில் பயன்படுத்துகின்றன. இதனால், பாகிஸ்தான் அரசும் இப்போது கழுதைப் பண்ணைகளை அமைப்பதற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்தக் காரணங்களால் பாகிஸ்தானில் ஒரு கழுதையின் விலை 2 லட்சம் ரூபாய் வரை அதிகரித்திருக்கிறது.

ஆனால், கழுதைகளை நம்பி சுமையேற்றும் தொழில் செய்யும் அந்நாட்டின் ஏழைகள் கழுதை வாங்க முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கழுதை வளர்த்து வந்த கராச்சியின் அப்துல் ரஷீத் கூறுகையில், “சில ஆண்டுகளுக்கு முன் 30,000 ரூபாய்க்கு ஒரு கழுதையை வாங்கி தொழில் செய்தேன். அது இறந்துவிட்டது. புதிதாக கழுதை வாங்க சந்தைக்கு சென்ற போது விலையை கேட்டு மயங்கி விழாத குறை. தற்போது கழுதை ஒன்றின் விலை 2 லட்சம் ரூபாயாக உள்ளது,” என்றார்.
இதையும் படிங்க: ஹப்பாடா! வர்த்தகப்போர் இனி இல்லை! பங்காளி சண்டையை மறந்து அமெரிக்கா, சீனா பேச்சுவார்த்தை!