• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’: எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!! செல்வப்பெருந்தகை வாழ்த்து..!!

    ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ நூலுக்காக ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
    Author By Shanthi M. Mon, 16 Mar 2026 16:11:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sahitya-academy-award-2025-announcement-for-writer-tamilchelvan

    இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாடமி விருது, 1954ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 24 அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளிலும் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. தமிழில் முதல் விருது 1955இல் நெல்லை சார்ந்த ஆர்.பி. சேதுப்பிள்ளைக்கு அவரது ‘தமிழ் இன்பம்’ நூலுக்காக வழங்கப்பட்டது. இது தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகும்.

    இந்நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் பிரிவில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு அவரது ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற ஆய்வு நூலுக்காகத் தேர்வு செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தைச் சேர்ந்த ச. தமிழ்ச்செல்வன், தமிழ் சிறுகதை இலக்கியத்தின் பரிணாமத்தை ஆழமாக ஆராய்ந்து எழுதிய இந்நூலைத் தயாரிக்க இரண்டு ஆண்டுகள் அயராது உழைத்தார். 

    sahitya academy award

    50க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படித்து, ஆழமான ஆய்வுடன் இப்படைப்பை உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தமிழ் சிறுகதை வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது.ஆனால், டிசம்பர் 18, 2025 அன்று டெல்லியில் நடைபெற்ற சாகித்ய அகாடமியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விருதாளர்கள் இறுதி செய்யப்பட்ட பின்னர், அறிவிப்பு வெளியிட திட்டமிடப்பட்ட செய்தியாளர் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

    இதையும் படிங்க: வன்முறை தீர்வா? MP அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு… செல்வப் பெருந்தகை கண்டனம்..!!

    மத்திய கலாசார அமைச்சகத்தின் உத்தரவால் இந்த அறிவிப்பு தடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சாகித்ய அகாடமி போன்ற சுதந்திரமான அமைப்பில் கூட அரசு தலையீடு செய்வதாக எழுத்தாளர்கள், இலக்கிய அமைப்புகள் கடுமையாக விமர்சித்தன. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட “கலாசார அமைச்சகத்துடன் ஆலோசனை செய்யாமல் விருதுகளை அறிவிக்கக்கூடாது” என்ற நிபந்தனை, படைப்பாளிகளின் சுதந்திரத்தையும் தகுதியையும் அவமதிப்பதாகக் கருதப்படுகிறது.

    இதனால், அகாடமியின் தன்னாட்சி பாதிக்கப்படுவதாகவும், அரசியல் தலையீடு அதிகரிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த சம்பவம் இந்திய இலக்கிய உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ச. தமிழ்ச்செல்வனின் படைப்பு தமிழ் சிறுகதை இலக்கியத்தின் வளர்ச்சியை ஆவணப்படுத்தும் மதிப்புமிக்க ஆய்வு என்பதால், இந்த விருது அவருக்கு உரியதாகப் பலரும் கருதுகின்றனர். ஆனால், அறிவிப்பு தாமதமாவதால், இலக்கிய விருதுகளின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பாக பல எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

    இந்நிலையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்கு அருகிலுள்ள நாகாலாபுரத்தைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய 'தமிழ் சிறுகதையின் தடங்கள்' என்ற இலக்கிய விமர்சன நூலுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.

    sahitya academy award

    சாகித்ய அகாடமி விருது என்பது இந்திய இலக்கியத்தில் சிறந்த படைப்புகளுக்காக, இந்திய அரசால் வழங்கப்படும் ஞானபீட விருதிற்கு பின் வழங்கப்படும் இரண்டாவது உயரிய இலக்கிய விருதாகும். தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கும், குறிப்பாக தமிழ் சிறுகதைகளின் பாரம்பரியமும் குறித்து ஆழமான பார்வையை வழங்கும் இந்த நூலுக்குக் கிடைத்திருக்கும் இந்த உயரிய அங்கீகாரம், எழுத்தாளர் அவர்களின் இலக்கியப் பங்களிப்பிற்கான சிறந்த பாராட்டாகும். இவ்விருதை பெற்றிருப்பதன் மூலம் தமிழ்நாட்டிலுள்ள பல எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

    இவ்விருதை பெற்றுள்ள ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து பல சிறந்த படைப்புகளை எழுதி தமிழ் இலக்கிய உலகை வளப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அன்புடன் வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: எடப்பாடியோட எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியும் காலி... அதிமுக - பாஜக கூட்டணியை எகிறி அடித்த செல்வப்பெருந்தகை...!

    மேலும் படிங்க
    நான் உயிருடன் தான் இருக்கிறேன்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

    நான் உயிருடன் தான் இருக்கிறேன்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

    உலகம்
    சென்னை சென்ட்ரலில் ரூ. 12.50 லட்சம் வெள்ளி பறிமுதல்! தேர்தல் பறக்கும் படை அதிரடி!

    சென்னை சென்ட்ரலில் ரூ. 12.50 லட்சம் வெள்ளி பறிமுதல்! தேர்தல் பறக்கும் படை அதிரடி!

    தமிழ்நாடு
    விஜய் வந்தால் கெயினர்! வராவிட்டால் லூசர்! அதிமுக கூட்டணி குறித்து ஜெயக்குமார் அதிரடி பேச்சு!

    விஜய் வந்தால் கெயினர்! வராவிட்டால் லூசர்! அதிமுக கூட்டணி குறித்து ஜெயக்குமார் அதிரடி பேச்சு!

    தமிழ்நாடு
    எரிவாயு தட்டுப்பாட்டிற்கு விடிவுகாலம்! ஹார்முஸ் நீரிணையை தாண்டி குஜராத் வந்தது

    எரிவாயு தட்டுப்பாட்டிற்கு விடிவுகாலம்! ஹார்முஸ் நீரிணையை தாண்டி குஜராத் வந்தது 'சிவாலிக்' கப்பல்!

    இந்தியா
    விஜய்யின் 25 நாள் தேர்தல் ஸ்கெட்ச்! பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக நிர்வாகிகள் ஆலோசனை!

    விஜய்யின் 25 நாள் தேர்தல் ஸ்கெட்ச்! பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக நிர்வாகிகள் ஆலோசனை!

    தமிழ்நாடு
    “தமிழக வெற்றிக் கழகம்” என அச்சிடப்பட்ட பையில் பரிசுப்பொருட்கள், விசில்... கொத்தாக தூக்கிய  தேர்தல் பறக்கும் படை...!

    “தமிழக வெற்றிக் கழகம்” என அச்சிடப்பட்ட பையில் பரிசுப்பொருட்கள், விசில்... கொத்தாக தூக்கிய தேர்தல் பறக்கும் படை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நான் உயிருடன் தான் இருக்கிறேன்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

    நான் உயிருடன் தான் இருக்கிறேன்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

    உலகம்
    சென்னை சென்ட்ரலில் ரூ. 12.50 லட்சம் வெள்ளி பறிமுதல்! தேர்தல் பறக்கும் படை அதிரடி!

    சென்னை சென்ட்ரலில் ரூ. 12.50 லட்சம் வெள்ளி பறிமுதல்! தேர்தல் பறக்கும் படை அதிரடி!

    தமிழ்நாடு
    விஜய் வந்தால் கெயினர்! வராவிட்டால் லூசர்! அதிமுக கூட்டணி குறித்து ஜெயக்குமார் அதிரடி பேச்சு!

    விஜய் வந்தால் கெயினர்! வராவிட்டால் லூசர்! அதிமுக கூட்டணி குறித்து ஜெயக்குமார் அதிரடி பேச்சு!

    தமிழ்நாடு
    எரிவாயு தட்டுப்பாட்டிற்கு விடிவுகாலம்! ஹார்முஸ் நீரிணையை தாண்டி குஜராத் வந்தது 'சிவாலிக்' கப்பல்!

    எரிவாயு தட்டுப்பாட்டிற்கு விடிவுகாலம்! ஹார்முஸ் நீரிணையை தாண்டி குஜராத் வந்தது 'சிவாலிக்' கப்பல்!

    இந்தியா
    விஜய்யின் 25 நாள் தேர்தல் ஸ்கெட்ச்! பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக நிர்வாகிகள் ஆலோசனை!

    விஜய்யின் 25 நாள் தேர்தல் ஸ்கெட்ச்! பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக நிர்வாகிகள் ஆலோசனை!

    தமிழ்நாடு
    “தமிழக வெற்றிக் கழகம்” என அச்சிடப்பட்ட பையில் பரிசுப்பொருட்கள், விசில்... கொத்தாக தூக்கிய  தேர்தல் பறக்கும் படை...!

    “தமிழக வெற்றிக் கழகம்” என அச்சிடப்பட்ட பையில் பரிசுப்பொருட்கள், விசில்... கொத்தாக தூக்கிய தேர்தல் பறக்கும் படை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share