தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் வேளையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வரிசையில், ஏப்ரல் 16 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த நாளில் சீமான் தஞ்சாவூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான கிருஷ்ணன் அவர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி அனுமதிக்கப்பட்டிருந்த 10 மணி வரையிலான நேரத்தைத் தாண்டி பேச்சு தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த நிகழ்வை கண்காணித்து வந்தனர். அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்த பிறகும் சீமான் தொடர்ந்து உரையாற்றியதால், அவரை நிறுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். எனினும், அவர் தொடர்ந்து பேசியதால் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு தஞ்சாவூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10 வருஷமா கத்தி கத்தி சாவுறோம்.. பரப்புரையில் சீமான் குமுறல்..!
தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இத்தகைய விதிமீறல்கள் பொதுவாக பொதுமக்களின் அமைதியை பாதிக்கும், போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் அல்லது இரவு நேர அமைதியை குலைக்கும் வகையில் நடைபெறும் பரப்புரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த தேர்தலில் பல்வேறு கட்சித் தலைவர்கள் மீது இதுபோன்ற வழக்குகள் பதிவாகி வரும் நிலையில், சீமான் மீதான இந்த வழக்கும் அத்தகைய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் நேரா எதுக்கு என் தொகுதியில பரப்புரைக்கு வரணும்..? சீமான் கேள்வி..!