தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெண் நிர்வாகிக்கு பாலியல் சீண்டல் அளித்த பூந்தமல்லி தவெக வேட்பாளர் பிரகாசம் (எ )குட்டி மீது 6 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளராக இருப்பவர் பிரகாசம் என்கிற குட்டி. நேற்று முன் தினம் விஜய் தவெக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதில் பிரகாசம் என்கிற குட்டி பூந்தமல்லி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு திருவள்ளூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தவெக மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் பிரகாசம் என்கிற குட்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைக்கு போகாதீங்க அங்க ஒரிஜினல் சரக்கு இல்லை - எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு...!
அப்போது மகளிர் அணி நிர்வாகி ஒருவரை பிரகாசம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து த.வெ.க தலைமைக்கு அந்த பெண் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுப்பதாக கூறி நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந் நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் வருகை தந்து பாலியல் சீண்டல் அளித்த தவெக வேட்பாளர் பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்திருந்தார்.
அவர் புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் நகர் போலீசார் குட்டி என்ற பிரகாசம் மீது
பிரிவு 296 B ,பிரிவு 74, பிரிவு 75(2) பிரிவு 79 பிரிவு 351(3) பிரிவு 4 ஆகிய 6 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்
புகார் அளித்த பெண்ணிடம் முதல் கட்டமாக போலீசார் விசாரணை மேற்கொண்ட பின்னர் பூந்தமல்லி தவெக வேட்பாளர் பிரகாசமிடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
பதவி கொடுக்கவில்லை என்பதால் தான் தனது கணவர் மீது பொய்யான புகார் பெண் அளித்துள்ளதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பிரகாசம் மனைவி நேற்று
எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்..! இபிஎஸ் சூறாவளி சுற்றுப்பயணம்..!! இரண்டாம் கட்ட பரப்புரை அறிவிப்பு வெளியீடு..!!