பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தொடர்ந்து அவமானங்களுக்கு உள்ளாகி வருகிறார்! சர்வதேச நிகழ்ச்சிகளில் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படும் சங்கடமான சம்பவங்கள் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த காசா அமைதி வாரியத்தின் (Board of Peace) முதல் கூட்டத்தில் ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு முன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட X பதிவில் 'United States of America' என்பதற்கு பதிலாக 'Unites States of Americas' என்று தட்டச்சு பிழை செய்தது. இது நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
கூட்டத்தில் குழு புகைப்படம் எடுக்கும் போது டிரம்ப் முன்னால் அமெரிக்க அதிகாரிகள் நின்றனர். சவுதி அரேபியா, கத்தார், இந்தோனேஷியா தலைவர்கள் டிரம்புக்கு பின்னால் இடம் பிடித்தனர். இதனால் ஷெபாஸ் ஷெரீப் கடைசி வரிசைக்கு தள்ளப்பட்டார். 5.5 அடி உயரமுள்ள அவருக்கு புகைப்படத்தில் தெரியாமல் போகும் அளவுக்கு சங்கடமான நிலை ஏற்பட்டது. டிரம்புடன் நெருக்கமாக நிற்பது பெருமைக்குரியது என்பதை இழந்தார்.
இதையும் படிங்க: பாக்., பிரதமர் மீண்டும் அமெரிக்கா பயணம்! ட்ரம்புடன் நெருக்கம்! ஷெபாஸ் ஷெரீப்பின் அடுத்தடுத்த அமெரிக்க பயணங்கள்!
டிரம்ப் பேச்சின் போது இந்தியா-பாகிஸ்தான் குறித்து பேசினார். "ஷெபாஸ் எழுந்து நில்லுங்கள்" என கூறினார். உடனே ஷெரீப் எழுந்தார். ஆனால் டிரம்ப் அவரைப் பற்றி எதுவும் கூறாமல் பிரதமர் மோடியை புகழ்ந்தார். "மோடி இப்போது நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்" என கூறினார். இதனால் ஷெரீப் தர்மசங்கடமடைந்து அமர்ந்தார்.

பின்னர் ஷெரீப் பேச்சில் டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினார் என புகழ்ந்தார். ஆனால் இந்தியா இதை மறுத்து வந்துள்ளது. இதுவும் விமர்சனத்துக்கு உள்ளானது. நிகழ்ச்சி முடிந்ததும் டிரம்பை கட்டியணைக்க முயன்றார். ஆனால் டிரம்ப் முதலில் கண்டுகொள்ளவில்லை. பின்னர் அழைத்து அனுப்பினார். இந்த வீடியோக்கள் வைரலாகின.
இதற்கு முன் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க சென்றார். துருக்கி அதிபர் எர்டோகனுடன் புடின் பேசிக் கொண்டிருந்ததால் 40 நிமிடங்கள் காத்திருக்க வைக்கப்பட்டார். பின்னர் வலுக்கட்டாயமாக அறைக்குள் நுழைந்து பேசிவிட்டு வந்தார். இதுவும் வீடியோவாக வெளியானது.
ஜெர்மனியில் பாதுகாப்பு மாநாட்டில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீரிடம் அடையாள அட்டை கேட்ட சம்பவமும் நடந்தது. இந்த தொடர் அவமானங்கள் பாகிஸ்தானின் சர்வதேச நிலையை கேள்விக்குள்ளாக்கியுள்ளன. நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எல்லை வரை வந்து சீண்டிய பாக்.,! காஷ்மீருக்கு குறி!! பாக்., பிரதமருக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!