ஏமன் மற்றும் சோமாலியா கடற்பகுதிகளில் நடந்த தனித்தனி சம்பவங்களில், 22 இந்தியர்களுடன் சென்ற இரண்டு வர்த்தகக் கப்பல்கள் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளன. இரண்டு கப்பல்களிலும் இருந்த அனைத்து இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளதாக இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆறு இந்தியர்கள் உட்பட 10 பணியாளர்களைக் கொண்ட, கேமரூன் கொடியிடப்பட்ட எம்/வி லுதுஃப் என்ற முதல் கப்பல், ஆகஸ்ட் 17 அன்று சோமாலியாவின் புன்ட்லாந்து கடற்கரைக்கு அப்பால் கடத்தப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 20 அன்று, யேமன் கடற்கரைக்கு அப்பால் ஏடன் வளைகுடாவில், 16 இந்தியர்கள் உட்பட 20 பணியாளர்களை ஏற்றிச் சென்ற, எரித்திரியா கொடியிடப்பட்ட எம்டி சிபு 1 என்ற இரண்டாவது எண்ணெய் கப்பல் கடத்தப்பட்டது.
எம்டி சிபு கப்பலில் ஆறு ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் இருந்ததாகவும், அவர்கள் கப்பலைக் கைப்பற்றியிருந்ததாகவும், அதே நேரத்தில் ஏகே-47 ரக ஆயுதங்களுடன் எட்டு ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் எம்/வி லுதுஃப் கப்பலில் ஏறி இரண்டு சிறிய படகுகளில் இருந்து செயல்பட்டு வந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதையும் படிங்க: உச்சநீதிமன்றம் வைத்த குட்டு... டாஸ்மாக் வழக்கில் நடந்த திடீர் திருப்பம்... செந்தில் பாலாஜி எடுத்த முக்கிய முடிவு...!
சிபு 1 என்றும் அழைக்கப்படும் சீமுல் என்ற எண்ணெய்க் கப்பலில் 16 இந்திய மாலுமிகள் இருந்தனர். அக்கப்பல் வியாழக்கிழமை ஏடன் வளைகுடாவில் ஆபத்து அழைப்பை விடுத்தது. துப்பாக்கி ஏந்தியவர்கள் கப்பலில் ஏறி, சோமாலியாவை நோக்கி அதன் பாதையை மாற்றும்படி கட்டாயப்படுத்தினர்.
கப்பல் குழுவில் ஆறு இந்தியர்கள், ஒரு துருக்கிய நாட்டவர், ஒரு ஜார்ஜிய நாட்டவர் மற்றும் இரண்டு செர்பியப் பாதுகாவலர்கள் இருந்தனர். இதற்கிடையில், அந்தச் சரக்குக் கப்பல் துருக்கிய ஆயுதங்கள், தகவல் தொடர்பு மற்றும் செயற்கைக்கோள் கருவிகளை ஏற்றிச் சென்று, மொகடிஷுவில் உள்ள ஒரு துருக்கிய இராணுவப் பயிற்சி மையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா சம்பந்தப்பட்ட பதட்டங்களால் உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தி சீர்குலைந்துள்ள நிலையில், அப்பிராந்தியத்தின் பிற பகுதிகளில் இந்திய மாலுமிகள் அதிகரித்த பாதுகாப்பு கவலைகளை எதிர்கொண்டுள்ள வேளையில் இந்த இரண்டு கப்பல் கடத்தல்களும் நிகழ்ந்துள்ளன.
வெளிநாட்டுக் கொடி ஏந்திய இரண்டு கப்பல்கள் கடத்தப்பட்டுள்ளன. ஒன்றில் 16 இந்தியர்களும், மற்றொன்றில் ஆறு இந்தியர்களும் உள்ளதாகவும், நாங்கள் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்; அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராக்கெட் வேகத்தில் சர்க்கரை விலை... 10 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு...!