நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக சத்துணவு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். நான்கு ஐந்து ஆண்டு காலமாக தங்களுக்காக எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை என சத்துணவு ஊழியர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர், காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர். சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பள்ளிகளில், மதிய உணவுத் திட்டத்தில் பணியாற்றும் சுமார் 65,000க்கும் அதிகமான ஊழியர்களுக்கு, பணிப் பாதுகாப்பும், முறையான ஓய்வூதியமும் வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி 313 ல் கூறிய திமுக, ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்தும், அதற்கான நடவடிக்கை எடுக்காததால், நாளை முதல் வேலை நிறுத்தம் செய்வதாக, மதிய உணவுத் திட்ட ஊழியர்கள் அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டினார். இதனால், பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று, திமுக கொடுத்த பல நூறு போலி வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று என்று தெரிவித்த அண்ணாமலை, பொய்யான வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றிவிட்டு, வாக்குறுதியை நிறைவேற்றக் கோரும் மக்களின் மீது, கைது நடவடிக்கை என அடக்குமுறையைக் கையாண்டு கொண்டிருக்கிறது திமுக அரசு என்றும் ஆனால், கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல், மீண்டும் மேடை போட்டு, மக்களை ஏமாற்றக் கிளம்பிவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் சாடினார்.
இதையும் படிங்க: அத்துமீறும் இலங்கை கடற்படை..!! கைதானவர்களை ரிலீஸ் பண்ணுங்க..!! மீனவர்கள் வேலை நிறுத்தம்..!!
சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது கூட, திமுகவினருக்கு உரைக்கவில்லையா என்று கடுமையாக சாடிய அண்ணாமலை எந்த முகத்தை வைத்துக் கொண்டு, நாளொரு சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: கொம்பு வெச்ச சிங்கம்டா..! வாடி வாசலில் சீறிப்பாய்ந்த அண்ணாமலையின் காளை..! அலறிய வீரர்கள்..!