• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் மதுபான விலை பாட்டிலுக்கு ரூ.20 வரை உயர்வு! புதிய வரி! எதற்காக தெரியுமா?

    தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுகிறது. பாட்டிலுக்கு தலா, 20 ரூபாய், சுற்றுச்சூழல் மற்றும் சமூக தீர்வை வரியாக விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
    Author By Pandian Sat, 08 Aug 2026 11:00:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil-Nadu-Liquor-Price-Hike-Rs-20-Environmental-Social-Levy-On-Liquor-Bottles

    தமிழகத்தில் மதுபானங்களின் விலை விரைவில் உயரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களுக்கு தலா ரூ.20-க்கு மிகாமல் சுற்றுச்சூழல் மற்றும் சமூக தீர்வை வரி விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் தினசரி அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மதுபானம் விற்பனை செய்யப்பட்ட பிறகு காலி பாட்டில்களை முறையாக சேகரித்து மறுசுழற்சி செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்து வருகின்றன. குறிப்பாக பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற தேவையும் அதிகரித்துள்ளது.

    இதையடுத்து, மதுபான பாட்டில்களுக்கு புதிய தீர்வை வரியை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.20 வரை சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை வசூலிக்க வழிவகை செய்யப்படுகிறது.

    இதையும் படிங்க: வருவாயை விட மக்கள் நலனே முக்கியம்! டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு திட்டத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

    LiquorPriceHike

    இந்த வரியை மதுபான விற்பனையில் ஈடுபடும் வணிகர்களே செலுத்த வேண்டிய பொறுப்பில் இருப்பார்கள். மதுபானத்தின் வகை, அதன் அளவு மற்றும் மதுபானம் அடைக்கப்பட்டுள்ள பாட்டில் அல்லது கொள்கலனின் தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு கட்டண விகிதங்களை அரசு நிர்ணயிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய வரி மூலம் கிடைக்கும் வருவாய் பல்வேறு சமூக மற்றும் சுற்றுச்சூழல் பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக காலி மதுபான பாட்டில்களை மறுசுழற்சி செய்வது, அவற்றை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவது மற்றும் மறுபயன்பாட்டை ஊக்குவிப்பது போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படலாம்.

    மேலும், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மீட்பு திட்டங்களுக்கும் இந்த நிதியை பயன்படுத்த முடியும். மதுப்பழக்கத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கான நலத்திட்டங்கள், மதுவால் ஏற்படும் உடல்நல மற்றும் சமூக பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களுக்கும் நிதி பயன்படுத்தப்படலாம்.

    இதுதவிர, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடுகள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாத்தல், பாதிக்கப்பட்ட இயற்கை வளங்களை மீட்டெடுத்தல் போன்ற பணிகளுக்கும் வருவாய் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக 2006-ம் ஆண்டு மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால், மதுபானங்களின் விலையில் புதிய வரிச்சுமை ஏற்படுவதால் நுகர்வோர் செலுத்தும் தொகையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    ஒருபுறம் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு நிதி திரட்டும் நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டாலும், மறுபுறம் ஏற்கனவே அதிகரித்து வரும் மதுபான விலைக்கு கூடுதல் சுமை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவும் இது நுகர்வோர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: இனி டாஸ்மாக் மதுபானம் வாங்க ஆன்லைன் போதும்! நாளை முதல் புதிய சேவை!!

    மேலும் படிங்க
    தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் களமிறங்கும் தவெக ஆதரவு எம்.பி.க்கள்!

    தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் களமிறங்கும் தவெக ஆதரவு எம்.பி.க்கள்!

    தமிழ்நாடு
    சந்தைக்கு வருவதற்குள்.. முன்பதிவில் பட்டையைக் கிளப்பிய சாம்சங் ஃபோல்டபிள் போன்கள்!!

    சந்தைக்கு வருவதற்குள்.. முன்பதிவில் பட்டையைக் கிளப்பிய சாம்சங் ஃபோல்டபிள் போன்கள்!!

    மொபைல் போன்
    கரூர் அரசுப்பணி விவகாரம்..! தவிக்கும் குடும்பங்கள்..!! வரும் 14ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!!

    கரூர் அரசுப்பணி விவகாரம்..! தவிக்கும் குடும்பங்கள்..!! வரும் 14ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!!

    தமிழ்நாடு
    “அந்த மாதிரி ஆண்களே குறி...”  - ஆப் மூலம் பணம் பறிக்கும் தில்லாலங்கடி கும்பல் சிக்கியது எப்படி? - பகீர் பின்னணி...!!

    “அந்த மாதிரி ஆண்களே குறி...” - ஆப் மூலம் பணம் பறிக்கும் தில்லாலங்கடி கும்பல் சிக்கியது எப்படி? - பகீர் பின்னணி...!!

    குற்றம்
    திமுகவை அப்படியெல்லாம் முடக்க முடியாது... சி.எம்.விஜய்க்கு கிளாஸ் எடுத்த எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!

    திமுகவை அப்படியெல்லாம் முடக்க முடியாது... சி.எம்.விஜய்க்கு கிளாஸ் எடுத்த எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!

    அரசியல்
    கிண்டி சிட்கோ நில வழக்கு..! மா.சுப்பிரமணியன், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு... பரபரப்பு திருப்பம்..!!

    கிண்டி சிட்கோ நில வழக்கு..! மா.சுப்பிரமணியன், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு... பரபரப்பு திருப்பம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் களமிறங்கும் தவெக ஆதரவு எம்.பி.க்கள்!

    தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் களமிறங்கும் தவெக ஆதரவு எம்.பி.க்கள்!

    தமிழ்நாடு
    கரூர் அரசுப்பணி விவகாரம்..! தவிக்கும் குடும்பங்கள்..!! வரும் 14ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!!

    கரூர் அரசுப்பணி விவகாரம்..! தவிக்கும் குடும்பங்கள்..!! வரும் 14ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!!

    தமிழ்நாடு
    “அந்த மாதிரி ஆண்களே குறி...”  - ஆப் மூலம் பணம் பறிக்கும் தில்லாலங்கடி கும்பல் சிக்கியது எப்படி? - பகீர் பின்னணி...!!

    “அந்த மாதிரி ஆண்களே குறி...” - ஆப் மூலம் பணம் பறிக்கும் தில்லாலங்கடி கும்பல் சிக்கியது எப்படி? - பகீர் பின்னணி...!!

    குற்றம்
    திமுகவை அப்படியெல்லாம் முடக்க முடியாது... சி.எம்.விஜய்க்கு கிளாஸ் எடுத்த எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!

    திமுகவை அப்படியெல்லாம் முடக்க முடியாது... சி.எம்.விஜய்க்கு கிளாஸ் எடுத்த எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!

    அரசியல்
    கிண்டி சிட்கோ நில வழக்கு..! மா.சுப்பிரமணியன், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு... பரபரப்பு திருப்பம்..!!

    கிண்டி சிட்கோ நில வழக்கு..! மா.சுப்பிரமணியன், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு... பரபரப்பு திருப்பம்..!!

    தமிழ்நாடு
    திமுகவின் புறக்கணிப்பு முறையற்றது.! அவங்களுக்கு அக்கறை இல்ல..!! அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி.!

    திமுகவின் புறக்கணிப்பு முறையற்றது.! அவங்களுக்கு அக்கறை இல்ல..!! அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share