#BREAKING விடிந்ததுமே விஜய்க்கு அதிர்ச்சி ... தவெக தலைவர் மீது பாய்ந்தது 5 வழக்குகள்... இரண்டே நிமிடத்தில் தலைகீழாக மாறிய களம்...!!
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கொளத்தூரில் மக்களுக்கு இடையுறு ஏற்படுத்தும் விதமாக பரப்புரை மேற்கொண்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் தவெக தலைவர் விஜய் வேட்புமணு தாக்கல் செய்த கையோடு தனது முதல் தேர்தல் பரப்புரையை தொடங்கினார். பெரம்பூர், கொளத்தூர் வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பின்னர் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு சென்றிருந்தார். அவர் அங்கு செல்வதற்கே ஏறத்தாழ மூன்றரை மணி நேரமானது. அதேபோல அவர் அனுமதி பெற்றதற்கு முன்னதாகவே அங்கு 5000 பேர் கூட்டியதாகவும் அதேபோல அனுமதி பெற்ற எண்ணிக்கையை விட அதிகப்படியான எண்ணிக்கை கூட்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
500 பேருக்கு அனுமதி கேட்ட நிலையில், 300 பேருக்கு மட்டுமே காவல்துறை அனுமதி அளித்திருக்கிறது. இந்த சூழலில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று 5000 பேர் கூட்டியதற்காக அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழே வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக காவல்துறை விஜய் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. ஐந்து ஒலிபெருக்கிகளுக்கு மட்டுமே காவல்துறை அனுமதி அளித்த நிலையில் 30 ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: “கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!
தவெக விஜய் நேற்றைய தினம் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு அவர் பாதியிலேயே பிரச்சாரத்தை முடித்து கொண்டு வீடு திரும்பி இருந்தார். அதாவது கரூர் துயர சம்பவம் போலவே திரும்பவும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக வேக வேகமாக அவர் வீடு திரும்பி இருந்தார். அது தொடர்பாக ஆதவ் அர்ஜூனா செய்தியாளர் சந்திப்பிலுமே அதை உறுதிப்படுத்தி இருந்தார். அதாவது அதிகபடியான மக்கள் கூட்டம் ஒரு குறுகிய சாலையில் கூடியதால் ஒரு பெரும் அசம்பாவிதம் ஏற்படு சூழல் ஏற்பட்டிருந்தது. அதை தவிர்ப்பதற்காகவே விஜய் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
ஏனென்றால் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற அந்த பிரச்சாரத்தில் 500 பேருக்கு அவர்கள் அனுமதி கூறியிருந்தார்கள். ஆனால் காவல்துறை குறுகிய பாதை என்பதனாலும் அசம்பாவிதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும் 300 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்திருந்தனர். ஆனால் அங்கு 5000 பேர் கூட்டியதற்காக விஷயம் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதேபோல ஒலிப்பெருக்கிகளுக்கும் அங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. ஐந்து ஒலிப்பெருக்கிகளுக்கு காவல்துறை அனுமதித்த நிலையில் 30 ஒலிப்பெருக்கிகள் மூலம் அங்கே பாடல் எழுப்பப்பட்டது. எனவே அங்க கூடியிருக்கக்கூடிய குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இடையுற ஏற்படுத்தியதாகவுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா? அனுமதி வாங்கலையா?... கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்வதில் சர்ச்சை..!!