எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!
எடப்பாடி பழனிசாமி எப்படி வெற்றி பெற்றார் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ்நாடு முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றார். அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு பிளவுகள் காரணமாக கட்சியின் தொண்டர்கள் தமிழக வெற்றி கழகத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். அதிமுக முக்கிய நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் மட்டுமின்றி தொண்டர்களும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர்.
அதிமுகவில் இருந்து வருபவர்களை அன்போடு வரவேற்கும் இடத்தில் தமிழக வெற்றி கழகம் இருப்பதாகவும் யாருக்கும் ஆஃபர் கொடுத்து தாங்கள் அழைக்கவில்லை எனவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்து இருந்தார். குதிரை பேரத்தின் மூலம் அதிமுக தொண்டர்களை தமிழக வெற்றிக் கழகத்தினர் இழுப்பது ஏன் என்று கேள்விகளை எதிர்க்கட்சியினர் முன் வைத்து உள்ளனர்.
இந்த நிலையில், மக்கள் விரும்பும் கட்சி தவெக என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். எதிர்காலத்தை நம்பி இணைகின்றனர் என்றார். எந்த குதிரை பேரமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். கொளத்தூர் தொகுதிக்கு முதல் நாள் விஜய் சென்றபோதே மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்று கூறினார்.
இதையும் படிங்க: கோவை போதைப் பொருள் கடத்தல் புகார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவி நீக்கணும்..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!
சூழ்ச்சி செய்துதான் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார் என்று கூறியுள்ளார். ஜெயலலிதா ஆட்சி செய்தபோது அதிமுகவினர் கட்சியில் இருந்து வெளியேறவில்லை என்றும் உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் ஏன் எங்களிடம் வருகின்றனர்., உங்கள் மீதான தவறை யோசியுங்கள் எனவும் தெரிவித்தார். கூட்டணி கட்சிகள் இல்லையென்றால் 10 தொகுதிகளில் கூட திமுக வெற்றி பெற்றிருக்காது எனவும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: "நாவடக்கம் தேவை ஆதவ்"... ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரிய தொண்டர் EPS... விளாசிய கே.பி. முனுசாமி..!