நீல கலர்ல மாத்தினா அப்பா தண்ணீர்.. தொடரும் ஸ்டிக்கர் சிந்துபாத்.. அதிமுக விமர்சனம்!!
அம்மா குடிநீர் திட்டத்தை கலர் மாற்றி திமுக ஸ்டிக்கர் ஒட்டி கொண்டுள்ளதாக அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2016 பிப்ரவரியில், சென்னையில் ஏழை மக்களுக்கு இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் இலவச குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது. மக்களுக்கு மலிவு விலையில் அல்லது இலவசமாக பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது இந்த திட்டம்.
இந்த நிலையில், சென்னையில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தால் செயல்படுத்தப்படுகிறது. இது மக்களுக்கு எளிதாகவும் மலிவு விலையிலும் குடிநீர் கிடைக்க உதவும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: PTR கொடுத்த பகீர் வாக்குமூலம்.. துவண்டு போன தொழில்துறை.. கொந்தளித்த அன்புமணி!!
அதிமுகவின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதாக தொடர்ந்து விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அம்மா குடிநீர் திட்டத்தை கலர் மாற்றி திமுக ஸ்டிக்கர் ஒட்டி கொண்டுள்ளதாக அதிமுக தரப்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
அம்மா குடிநீர் திட்டம் பச்சை கலர் என்றும் அதனை ப்ளூ கலராக மாற்றி ஸ்டிக்கர் ஒட்டிட்டா SmartWaterATM ரெடி என்றும் விமர்சிக்கப்பட்டது. பொம்மை முதல்வரின் ஸ்டிக்கர்கள் சிந்துபாத் கதையை விட நீளமாக தொடர்கின்றன என்றும் ஸ்டிக்கர் மாடல் விடியா அரசு எனவும் அதிமுக குற்றம் சாட்டி உள்ளது.
இதையும் படிங்க: ஒத்த வீடியோக்கு பத்து வருஷமா? பிஜேபிக்கு அவ்ளோ அக்கறை! ரோஸ்ட் செய்த முதல்வர்