×
 

அதிரும் அரசியல் களம்...!! - ஜெயலலிதா பிறந்தநாளில் சபதமேற்ற இபிஎஸ்... அதிமுக தொண்டர்கள் உற்சாகம்...!

திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வாழ்த்து செய்தியோடு சபதமும் ஏற்றிருப்பதையும் அதிமுக தொண்டர்களுக்கு அறிவித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை முதலே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் விழா கோலம் பூண்டுள்ளது.  இன்று காலை 10.30 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை யில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று, ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்குகிறார்.

இதனையடுத்து மாவட்டங்கள் தோறும் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கட்சி கொடியேற்றி, ஜெயலலிதாவின் உருவ சிலை மற்றும் உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளனர். 

வர உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வாழ்த்து செய்தியோடு சபதமும் ஏற்றிருப்பதையும் அதிமுக தொண்டர்களுக்கு அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க: COPY, PASTE அரசியல் அதிமுகவின் வாடிக்கை... இபிஎஸ்-ஐ பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்.!!

இதுகுறித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அவர், இதயதெய்வம் புரட்சித் தலைவி “அம்மா” அவர்களின் 78வது பிறந்த நாளில், அம்மாவின் நெடும் புகழை போற்றுகிறோம், “அம்மா” எங்களின் அடையாளம் … ஏழைகளின் நம்பிக்கை, பெண்களின் தைரியம், தாய்மையின் உருவம். அதிகாரம் அவரை உயர்த்தவில்லை; மக்கள் மீது கொண்ட அன்பே அவரை உயர்த்தியது. புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு தீர்மானமும், “Poverty Alleviation” -க்கான Global standards -சை  நிறுவி ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது. சோதனைகள் சூழ்ந்த தருணங்களிலும் அசைக்க முடியாத மனவலிமையுடன் தமிழகம் காக்க போராடிய தலைவர்.

We Take a leaf out of your book in all 
of our actions for the people Amma 🙏

'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சொன்னதைப் போல, @AIADMKOfficial என்றென்றும் மக்கள் இயக்கமாகவே திகழ்கிறது. “எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்தார்கள். 

அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள். அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனைகளையெல்லாம், தி.மு.க. அரசு தங்களது சாதனைகளாக பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் தி.மு.க-வினரின் பிரச்சாரங்களை முறியடித்து, கழகத்தின் தலைமையிலான பொற்கால ஆட்சியில் செய்திட்ட சாதனைகளையெல்லாம் எடுத்துக் கூறி, தேர்தல் களத்திலே மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கு அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்! என்று அம்மா அவர்களின் பிறந்த நாளில் வீரசபதம் ஏற்போம்.

"நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ்! வளர்க புரட்சித் தலைவி அம்மாவின் பெரும் புகழ்! வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்! எனக்குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: அடிதூள்...!! - இவர்களுக்கு நிவாரணம் ரூ.12,000 ஆக உயர்வு...இபிஎஸ் புதிய தேர்தல் வாக்குறுதி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share