×
 

அவங்க என் குடும்பம்... இடைநிலை ஆசிரியர்களை கைவிடமாட்டோம் - அன்பில் மகேஷ் உறுதி...!

இடைநிலை ஆசிரியர்களை கைவிடமாட்டோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதிப்பட கூறினார்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வருகின்றனர். இந்தப் பிரச்னை கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ஒரு ஊதிய முரண்பாட்டால் உருவானது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதிக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும், ஜூன் 1ஆம் தேதிக்குப் பிறகு சேர்ந்த ஆசிரியர்களுக்கும் இடையே அடிப்படை ஊதியத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உள்ளது.

ஒரே மாதிரியான பணி, ஒரே கல்வித் தகுதி இருந்தும், இந்த வேறுபாடு இருப்பதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது ஏறத்தாழ 20,000 ஆசிரியர்களைப் பாதித்துள்ளது.இந்த முரண்பாடு ஊதிய ஆணைய மாற்றங்களால் ஏற்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற தீர்ப்புக்கு எதிரானது என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (SSTA) இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆசிரியர்கள் போராடியபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். 2021ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகியும் இது நிறைவேற்றப்படவில்லை என்பதே ஆசிரியர்களின் முக்கிய குற்றச்சாட்டு. தொடர்ந்து இடைநிலையாசிரியர்கள் போராடி வருகின்றனர். இதனிடையே, இடைநிலை ஆசிரியர்களை ஒரு போதும் கைவிடமாட்டோம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தலைமுறைகளை செதுக்கும் சிற்பிகள் ஆசிரியர்கள்... வாட்டி வதைக்காதீர்கள்... சீமான் கண்டனம்...!

இடைநிலை ஆசிரியர்கள் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் என்றும் அவர்களை நாங்கள் கைவிட மாட்டோம் எனவும் கூறினார். நாங்கள் ஒரு கட்டத்தில் நிற்கிறோம், போராட்டம் நடத்துபவர்கள் ஒரு கட்டத்தில் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். நல்ல முடிவை எடுப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். ஆசிரியர்கள் போராட்டம் என்பது வெறும் பத்திரிகை செய்தி மட்டுமல்ல என்று கூறிய அமைச்சர், இதனைப் போராட்டமாக பார்க்கவில்லை என்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அவர்களுடைய வலி, அவர்களின் துறை அமைச்சர் என்ற வகையில் தனக்கும் இருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம்... இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு... போராட்டம் தொடரும் என திட்டவட்டம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share