இம்மாதூண்டு திறமை கூட இல்ல... முக்கிய துறைகளில் வேலுவுக்கு ஏன் முன்னுரிமை? அன்புமணி விளாசல்!
அமைச்சர் எ.வ வேலுவுக்கு என்ன திறமை இருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முழுவதும் உள்ள அன்புமணியின் அணி சார்ந்த பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஒவ்வொரு பொதுக்குழு கூட்டத்திலும் பேருரை ஆற்றும் அன்புமணி, திமுகவின் கடுமையாக விமர்சித்து இருந்தார். திமுக பாமகவை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும், திமுக தான் நமது எதிரி., அண்ணன் தம்பிகளாக பழகும் நமக்குள் சண்டை எதற்கு., பாமக எந்த கூட்டணியில் உள்ளதோ அந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்றும் அன்புமணி பேசி இருந்தார். இந்த நிலையில் திருவண்ணாமலையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, அமைச்சர் எ.வ வேலுவை கடுமையாக விமர்சித்தார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்ற முக்கியத்துறைகளை எ.வ வேலுவிற்கு கொடுக்க என்ன காரணம் என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: பாமக MLA அருளுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் தொடர் சிகிச்சை.. பாமகவினர் அதிர்ச்சி!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும் வன்னியர் சமுதாயம் தான் பிரதான சமுதாயம் எ.வ வேலு என்ற ஒரு குறுநில மன்னர் இருக்கிறார் எனவும் விமர்சித்தார். எ.வ வேலுவிற்கு முக்கியத்துறைகளை ஒதுக்க என்ன காரணம் என்றும் அவருக்கு என்ன திறமை இருக்கிறது எனவும் சரமாரியாக கேள்விகளை முன் வைத்தார்.
மேலும், வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின் என்று கூறினார். திமுக ஆட்சி ஒரு கொடுங்கோல் ஆட்சி என்றும், இந்த ஆட்சி முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். திமுகவுக்கு வன்னியர் சமுதாய மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும், திமுக பாமகவை பலவீனப்படுத்த சூழ்ச்சி செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: PTR கொடுத்த பகீர் வாக்குமூலம்.. துவண்டு போன தொழில்துறை.. கொந்தளித்த அன்புமணி!!