×
 

அண்ணா பல்கலை. சம்பவத்தில் மா.சு.க்கு தொடர்பு? தொக்காக மாட்டிய திமுக நிர்வாகி.. பகீர் கிளப்பும் அண்ணாமலை..!

ஞானசேகரன் வழக்கு விவகாரத்தில் திமுக அரசு யாரை காப்பாற்ற துடிக்கிறது என மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ள சூழ்நிலையில் பல பகிர் கிளப்பும் தகவல்களை அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.  அந்த வீடியோவில் அண்ணாமலை பேசியதாவது; டிசம்பர் 23ஆம் தேதி சம்பவம் நடந்த நிலையில் அதன் பிறகு ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.

டிசம்பர் 25ஆம் தேதி ஞானசேகரன் கைது செய்யப்பட்ட பின் எஃப் ஐ ஆர் விவரம் கசிய விடப்பட்டது. சம்பவம் நடந்த போது ஞானசேகரனின் செல்போன் பிளைட் மோடில் இருந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த பிறகு, ஞானசேகரன் செல்போனில் இருந்து ஒரு காவல்துறை அதிகாரிக்கு அழைப்பு சென்றுள்ளது. மீண்டும் அந்த அதிகாரி ஞானசேகரனை அழைத்துள்ளார்.

இதையும் படிங்க: எதுக்கும் பயப்படாதீங்க.. தைரியமா COMPLAINT கொடுங்க.. அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை!!

இதற்கிடையில் டிசம்பர் 24 ஆம் தேதி கோட்டூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு செல்வதற்கு முன்பாக ஞானசேகரன் திமுக நிர்வாகி கோட்டூர் சண்முகத்திடம் ஐந்து முறை பேசி இருக்கிறார். விசாரணைக்கு சென்று வந்த பிறகு ஒருமுறை பேசி இருக்கிறார். ஞானசேகரனிடம் பேசிய பிறகு கோட்டூர் சண்முகம் அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் பேசியிருக்கிறார்.

இதற்கு நடுவில், டிசம்பர் 23 டிசம்பர் 24, 25, 26 என மொத்தமாக நான்கு நாட்களில் கோட்டூர் சண்முகம், அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி செய்யும் நடராஜனும் 13 முறை பேசியிருக்கிறார்கள். இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதா? யாரைக் காப்பாற்ற இந்த பதற்றம் என அண்ணாமலை கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள் இண்ணமும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குற்றவாளி ஞானசேகரனுக்கான தீர்ப்பு விபரங்கள்..! ஆர்டர் காப்பியை ஒப்படைத்த நீதிமன்றம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share