×
 

"நாகரீகமில்லா கூத்தாடிக்கு முதல்வர் பதவி ஒரு கேடா"..! அப்பாவு விமர்சனம்... பரபரப்பு..!!

முதல்வர் விஜய் குறித்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு சரமாரி விமர்சனத்தை முன் வைத்தார்.

முன்னாள் சபாநாயகர் அப்பாவு, தற்போதைய முதலமைச்சர் விஜய் அவர்களின் சமீபத்திய அரசியல் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி அமைந்த நூறு நாட்களுக்குள்ளாகவே மக்களிடையே கோபமும், இளைஞர்களிடையே அதிருப்தியும், பெண்களிடையே சாபமும், விவசாயிகளிடையே கண்ணீரும், அரசு ஊழியர்களிடையே ஆவேசமும் தோன்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சூழலில் செல்வாக்கு சரிந்து வருவதை உணர்ந்து, இடைத்தேர்தலில் பழைய உத்திகள் பலன் தராது என்பதற்காக முன்னர் கல்லாப்பெட்டி கூட்டணி என்று வர்ணிக்கப்பட்ட கட்சிகளை அழைத்து மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி என்று பெயர் மாற்றம் செய்துவிட்டால் மட்டும் மக்களின் ஆதரவை மீண்டும் பெற்றுவிடலாம் என்று கனவு காணவேண்டாம் என அவர் எச்சரித்தார்.

நேற்று தங்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் முடிந்த பின்னர், கூட்டத்தின் நோக்கம் குறித்தோ, பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்தோ, இடைத்தேர்தலில் போட்டியிடும் உத்தி குறித்தோ பத்திரிகையாளர்களைச் சந்தித்து தெளிவாகப் பேசும் துணிவு இல்லாமல், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்கள் விருப்பப்படி கருத்துகளைச் சொல்லிக்கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டது நரித்தனத்தின் வெளிப்பாடு என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவர் என்றும் அப்பாவு குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: "விஜயின் தரம் தாழ்ந்த பேச்சு"..! சந்தி சிரிக்கும் சட்டமன்ற மாண்பு... அப்பாவு விமர்சனம்.!

இந்தியாவில் அரசியல் அமைப்புச் சட்டம், பத்திரிகைச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் ஆகிய மக்களின் உரிமைகளுக்கு எதிராக அன்னை இந்திரா அவர்களால் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலையை அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி எதிர்த்துக் குரல் கொடுத்ததால் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் சித்திரவதை அனுபவித்த தியாக வரலாற்றை சட்டமன்றத்தில் கேலி செய்து கூத்தடிக்கும் பண்பில்லாத, அறிவில்லாத, "நாகரிகமில்லாத கூத்தாடிக்கு முதல்வர் பதவி ஒரு கேடா" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், ஒருமுறை ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த என்.டி.ராமராவ்  வெளிநாட்டுப் பயணம் சென்று திரும்புவதற்குள் சந்திரபாபு நாயுடு ஆட்சியைக் கவிழ்த்து முதல்வரானது போல், ஆதவ் அர்ஜூனா முதல்வராகிவிடக் கூடாது என்ற பயத்தில் தன்னுடன் லண்டன் அழைத்துச் செல்கிறீர்களா என்றும் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதையும் படிங்க: அனல்மின் திட்ட அறிவிப்பு தேவையா.? தனியாருக்கு விற்க போறீங்களா.? முதல்வருக்கு அப்பாவு கேள்வி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share